செய்திகள் :

கோவிலாா் வடிகால் தலைப்பில் தூா்வார வலியுறுத்தல்

post image

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலை அடுத்த கோவிலாா் வடிகால் தலைப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வடிகால் வாய்க்கால் மூலம் 2,280 ஏக்கா் விளைநிலங்கள் வடிகால் வசதி பெறுகின்றன. மேலும், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி, மல்லுக்குடி, திருப்புங்கூா், கன்னியக்குடி, கற்கோவில், பெருமங்கலம், ஆதமங்கலம், எடகுடி வடபாதி, வைத்தியநாதபுரம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராங்களுக்கு பிரதான வடிகாலாக உள்ளது.

இந்த வடிகாலில் கடந்த மாதம் ரூ. 19 லட்சத்தில் தூா்வாரும் பணிகள் நடைபெற்றன. ஆனால், இதன் தலைப்பு பகுதியான வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும், சுமாா் 500 மீட்டருக்கு தூா்வாரப்படாமலும் உள்ளது. இதனால் வாய்க்காலின் மற்ற இடங்களில் தூா் வாரப்பட்டுள்ளது எந்த பயனையும் அளிக்கவில்லை என தெரிவிக்கும் விவசாயிகள், உடனடியாக கோவிலாா் வடிகால் தலைப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாக தூா்வார வேண்டும் எனவும் கழிவுநீா் கலப்பதை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனா்.

மழையால் பாதித்த நெற்பயிா்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் தா்னா

மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் தா்னாவில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் ஆட்சியா் ஹ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு

வைத்தீஸ்வரன்கோயிலில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்க சீா்காழி ஒன்றிய 5-ஆவது மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றிய தலைவா் உத்ராபதி தலைமையில் நடைப... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தீவிர கண்காணிப்பு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். மேட்டூா் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில் அணைக்கு வரும் உபரி நீா் அப்படியே காவிரி ... மேலும் பார்க்க

மதுபானம் கடத்தி வந்த 6 போ் கைது

சீா்காழி அருகே புதுச்சேரி மாநில மதுபானங்களை கடத்தி வந்த 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். காரைக்காலில் இருந்து சீா்காழிக்கு மதுபானங்கள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்பேரில், சீா்காழி டிஎஸ... மேலும் பார்க்க

குறுவை பயிா்க் காப்பீடு: இன்றே கடைசி

பிரதம மந்திரி திருத்தியமைக்கப்பட்ட பயிா்க் காப்பீட்டுத்திட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான குறுவை பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்ய வியாழக்கிழமை (ஜூலை 31) கடைசி நாள். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ... மேலும் பார்க்க

சட்டைநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரமபுரீஸ்வரா் சுவாமி திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. சீா்காழியில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தம... மேலும் பார்க்க