செய்திகள் :

சதுரகிரியில் ஆடி அமாவாசை; ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் மலையேறி சாமி தரிசனம்

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் மதுரை மாவட்ட சாப்டூர் வனச்சரக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்குள் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இங்கு சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கம் என இரண்டு சிவலிங்கங்கள் வெவ்வேறு இடங்களில் இருக்கின்றன.

மலையேறும் பக்தர்கள்

இது மட்டுமல்லாமல் 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கர் இங்கு தவம் செய்வதாகவும் இன்னும் சில சித்தர்கள் இங்கு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

இந்த கோயிலில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரகணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்களின் வாகனங்கள் தாணிப்பாறை விளக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அங்கிருந்து சுமார் 6 கி.மீ நடந்து வந்து தாணிப்பாறை அடிவாரத்தை அடைந்து, பின் மலையேறி வருகின்றனர். மலையேறும் பக்தர்கள் பிற்பகல் 12மணி வரை தான் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வனப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்க அனுமதி இல்லை என்றும் வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறுகலான பகுதியில் மலையேறும் பக்தர்கள்

மேலும் பக்தர்கள் யாரும் இரவில் மலைக்கோயிலில் தங்க அனுமதி கிடையாது என்றும் அறிவித்தப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை பாதுகாப்புப் பணியில் விருதுநகர், மதுரை மாவட்ட போலீசார், வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர், நக்சல் தடுப்பு போலீசார் என 2500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அடிக்கடி காற்றாற்று வெள்ளம் ஏற்படும் என்பதால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 60க்கும் மேற்பட்டோர் ஆற்றுப்பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாணிப்பாறை அடிவாரப் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்களின் வருகையே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

``குன்றாண்டார் கோயில் பராமரிப்புக்கு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு!'' - துரை வைகோ எம்.பி சொல்வதென்ன?

புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த 25 வருடங்களாக பராமரிப்பில்லாமல் இருக்கும் குன்றாண்டார் கோயிலை புனரமைக்க ரூ. 12 லட்சம் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, திருச்சி எம்.பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.இதுகுறித... மேலும் பார்க்க

சதுரகிரி ஆடி அமாவாசை விழா: பிரதோஷத்திற்குக் குவிந்த பக்தர்கள்; வனத்துறையின் கட்டுப்பாடுகள் என்னென்ன?

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்.இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விம... மேலும் பார்க்க

பிரம்மஹத்தி பரிகார ஹோமம்: கடன்; நஷ்டம்; தோல்வி; தடை என அனைத்தையும் நீக்கி வெற்றி தரும் வழிபாடு

2025 ஆகஸ்ட் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது. கடன்; நஷ்டம்; தோல்வி; சூழ்ச்சி; தடை என அனைத்தையும் நீக்கி வெ... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: 50 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை; மகிழ்ச்சியில் பக்தர்கள்!

தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென் திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாமலையின் உச்சியில் நின்ற கோலத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் காட்சியளிக்கிறார். ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண... மேலும் பார்க்க

``இதுவரை 3347 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு'' - திருப்பரங்குன்றம் குடமுழுக்கு குறித்து சேகர் பாபு

முருகக்கடவுளின் முதல் படைவீடான உலகப்புகழ் பெற்ற மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று காலையில் குடமுழுக்கு விழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெ... மேலும் பார்க்க