செய்திகள் :

``குன்றாண்டார் கோயில் பராமரிப்புக்கு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு!'' - துரை வைகோ எம்.பி சொல்வதென்ன?

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த 25 வருடங்களாக பராமரிப்பில்லாமல் இருக்கும் குன்றாண்டார் கோயிலை புனரமைக்க ரூ. 12 லட்சம் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, திருச்சி எம்.பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தனது சமூகவலைதள பக்கத்தில் செய்துள்ள பதிவில்,

"எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 25 ஆண்டுகளாக உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத குன்றாண்டார் கோயில் சம்பந்தமாக, ஒன்றிய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகத்திற்கு நான் எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள் 21.07.2025 அன்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார்.

குன்றாண்டார் கோயில்

அதில், 'குன்றாண்டார் கோயில் பகுதியில் அமைந்துள்ள பாறை குடவறை சிவன் கோயில், பீடத்தின் முகப்பில் சக்கரம் பொறுத்தப்பட்ட தேர் மண்டபம் ஆகியவை இந்திய தொல்லியல் கண்காணிப்பகத்தின் (ASI) கட்டுப்பாட்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக உள்ளது' என்று தெரிவித்துள்ளனர்.

குன்றாண்டார் கோயில்

மேலும், இதற்கு ஒதுப்படும் நிதி குறித்த எனது கேள்விக்கு, வருடாந்திர பாதுகாப்பு திட்டம் (ACP) தயாரிக்கப்பட்டு, நடப்பு நிதியாண்டில் (2025-26) ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பதிலளிக்கப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டால் குன்றாண்டார் கோயில் புனரமைக்கப்பட்டு பொழிவுபெறும்.

இதனால், பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பெருமளவில் இப்பகுதிக்கு வருகை தரக்கூடுமென்றும், அதனால் இப்பகுதி மக்களின் பொருளாதாரம் மேம்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சதுரகிரியில் ஆடி அமாவாசை; ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் மலையேறி சாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் மதுரை மாவட்ட சாப்டூர் வனச்சரக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்குள் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இ... மேலும் பார்க்க

சதுரகிரி ஆடி அமாவாசை விழா: பிரதோஷத்திற்குக் குவிந்த பக்தர்கள்; வனத்துறையின் கட்டுப்பாடுகள் என்னென்ன?

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்.இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விம... மேலும் பார்க்க

பிரம்மஹத்தி பரிகார ஹோமம்: கடன்; நஷ்டம்; தோல்வி; தடை என அனைத்தையும் நீக்கி வெற்றி தரும் வழிபாடு

2025 ஆகஸ்ட் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது. கடன்; நஷ்டம்; தோல்வி; சூழ்ச்சி; தடை என அனைத்தையும் நீக்கி வெ... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: 50 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை; மகிழ்ச்சியில் பக்தர்கள்!

தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென் திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாமலையின் உச்சியில் நின்ற கோலத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் காட்சியளிக்கிறார். ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண... மேலும் பார்க்க

``இதுவரை 3347 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு'' - திருப்பரங்குன்றம் குடமுழுக்கு குறித்து சேகர் பாபு

முருகக்கடவுளின் முதல் படைவீடான உலகப்புகழ் பெற்ற மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று காலையில் குடமுழுக்கு விழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெ... மேலும் பார்க்க