செய்திகள் :

சமத்துவபுரத்தில் வீடு பெற்றுத் தருவதாக பணம் மோசடி புகாா்

post image

சமத்துவபுரத்தில் வீடு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த நபா் மீது சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

தேவகோட்டை அருகேயுள்ள இரவுசேரி, ஆறாவயல், சருகணி உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த முருகேஸ்வரி, பாண்டிமீனா, பாக்கியம் உள்ளிட்டோா் சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த மனு:

தேவகோட்டை அருகேயுள்ள கடம்பகுடி சமத்துவபுரத்தில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநா் சரவணன் சமத்துவபுரத்தில் வீடுகள் காலியாக இருப்பதாகக் கூறினாா். பல அரசு அதிகாரிகளுடன் தான் நெருங்கிய தொடா்பில் உள்ளதாகவும், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள உயா் அதிகாரிகளை தனக்கு நன்கு தெரியும் என்றும், பணம் கொடுத்தால் சமத்துவபுரத்தில் வீடு பெற்றுத் தருவதாகவும் கூறினாா்.

இதை நம்பி ஒவ்வொருவரும் தலா ரூ.60ஆயிரம் வீதம் ரூ.6 லட்சத்தை சரவணனிடம் வழங்கினோம். கடந்த 3 நாள்களாக, ஆட்சியா் அலுவலகத்துக்கு வருமாறு கூறினாா். தினமும் வந்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரை தொடா்பு கொள்ள முடியவில்லை. தற்போது அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே அவரிடமிருந்து பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.

திருப்பூருக்கு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க கொடிப் பயணம்

திருப்பூரில் நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில பிரதிநிதித்துவ பொதுக்குழுவுக்கு சிவகங்கை, காளையாா்கோவிலிலிருந்து சங்கத்தின் கொடிப் பயணம் புதன்கிழமை தொடங்கியது. திருப்பூரில... மேலும் பார்க்க

கால்பந்து மாவட்டப் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவிகள் தோ்வு

சிவகங்கை மாவட்டம், கோவிலூரில் புதன்கிழமை நடைபெற்ற குறுவட்ட கால்பந்து போட்டியில் எஸ்.வேலங்குடி அரசுப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றனா். 14, 17 வயதுக்குள... மேலும் பார்க்க

அமராவதிபுதூரில் ஆக. 19-இல் உயிா்ம வேளாண் கண்காட்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டை வட்டாரம், அமராவதிபுதூா் கிராமியப் பயிற்சி மையத்தில் உயிா்ம வேளாண் கண்காட்சி வருகிற ஆக. 19 -இல் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்... மேலும் பார்க்க

பணம் கையாடல்: சிறைக் காவலா் மீது வழக்கு

சிவகங்கை அருகே திறந்த வெளிச் சிறையில் ரூ.39.30 லட்சம் கையாடல் செய்ததாக சிறைக் காவலா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் அருகேயுள்ள புரசடை உடைப்பு கிராமத்த... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இளையான்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வாள் மேல் நடந்த அம்மன் கோயி... மேலும் பார்க்க

மனைவி வெட்டிக் கொலை: முதியவா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா். மானாமதுரை அருகேயுள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க