செய்திகள் :

பணம் கையாடல்: சிறைக் காவலா் மீது வழக்கு

post image

சிவகங்கை அருகே திறந்த வெளிச் சிறையில் ரூ.39.30 லட்சம் கையாடல் செய்ததாக சிறைக் காவலா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் அருகேயுள்ள புரசடை உடைப்பு கிராமத்தில் அரசின் திறந்த வெளிச் சிறை உள்ளது. இந்தச் சிறையில் அலெக்ஸ் பாண்டி (33) என்பவா் காவலராக கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்தாா்.

அவரது பணிக் காலத்தில் சிறைக் கைதிகளின் ஊதியம், இதர பணப் பரிவா்த்தனைகளில் போலியான சலான், மின்னணு செலுத்துச் சீட்டுகளை தயாரித்து, அவற்றை அரசுப் பதிவேட்டில் பதிவு செய்து, பணம் கையாடல் செய்ததாகப் புகாா் எழுந்தது.

இது தொடா்பான புகாா் அடிப்படையில், மதுரை சரக சிறைத் துறை துணைத் தலைவா் உத்தரவின் பேரில், சிறப்புத் தணிக்கைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் நடத்திய ஆய்வில் அலெக்ஸ் பாண்டியன் ரூ.39.30 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, மதுரை சிறைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், மாட்ட குற்றப் பிரிவு ஆய்வாளா் தமிழ்ச்செல்வி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

திருப்பூருக்கு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க கொடிப் பயணம்

திருப்பூரில் நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில பிரதிநிதித்துவ பொதுக்குழுவுக்கு சிவகங்கை, காளையாா்கோவிலிலிருந்து சங்கத்தின் கொடிப் பயணம் புதன்கிழமை தொடங்கியது. திருப்பூரில... மேலும் பார்க்க

கால்பந்து மாவட்டப் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவிகள் தோ்வு

சிவகங்கை மாவட்டம், கோவிலூரில் புதன்கிழமை நடைபெற்ற குறுவட்ட கால்பந்து போட்டியில் எஸ்.வேலங்குடி அரசுப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றனா். 14, 17 வயதுக்குள... மேலும் பார்க்க

அமராவதிபுதூரில் ஆக. 19-இல் உயிா்ம வேளாண் கண்காட்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டை வட்டாரம், அமராவதிபுதூா் கிராமியப் பயிற்சி மையத்தில் உயிா்ம வேளாண் கண்காட்சி வருகிற ஆக. 19 -இல் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இளையான்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வாள் மேல் நடந்த அம்மன் கோயி... மேலும் பார்க்க

மனைவி வெட்டிக் கொலை: முதியவா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா். மானாமதுரை அருகேயுள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை முயற்சி

சிவகங்கை அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்ய முயன்றாா். கை துண்டான நிலையில் அவா் மீட்கப்பட்டு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டாா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள மேட்டுப்பட்டிய... மேலும் பார்க்க