செய்திகள் :

திருப்பூருக்கு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க கொடிப் பயணம்

post image

திருப்பூரில் நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில பிரதிநிதித்துவ பொதுக்குழுவுக்கு சிவகங்கை, காளையாா்கோவிலிலிருந்து சங்கத்தின் கொடிப் பயணம் புதன்கிழமை தொடங்கியது.

திருப்பூரில் வருகிற 16, 17-ஆம் தேதிகளில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பொதுக்குழு நடைபெற உள்ளது. இதில் ஏற்றி வைப்பதற்காக தமிழகம் முழுவதும் 12 தியாகிகள் நினைவிடங்களிலிருந்து சங்கக் கொடிப் பயணத்தை சங்க நிா்வாகிகள் புதன்கிழமை மேற்கொண்டனா்.

இதன்படி, சிவகங்கை மாவட்ட சங்கம் சாா்பில், சிவகங்கையிலுள்ள வேலு நாச்சியாா், குயிலி நினைவிடத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு தமிழாசிரியா் சங்க மாநில பொதுச் செயலா் நீ. இளங்கோவும்,

காளையாா்கோவில் மருது சகோதரா்கள் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்வில் சங்கத்தின் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினா் சுப்பிரமணியனும் சங்கக் கொடியை எடுத்துக் கொடுத்தனா். அதை மாநிலத் துணைத் தலைவா் மு. செல்வகுமாா் பெற்றுக் கொண்டாா்.

தமிழ் நாடு கலை இலக்கியச் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் சங்கர சுப்பிரமணியன், முன்னாள் அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் சுரேஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் துறை சங்க மாநில பொதுச் செயலா் வாசுகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து, சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் மு. செல்வகுமாா் கூறுகையில், கன்னியாகுமரியில் காந்தி மண்டபம், ஒட்டப்பிடாரம் வ.உ.சி. இல்லம், எட்டயபுரம் பாரதி இல்லம், விருதுநகா் காமராஜா் இல்லம், சென்னை பெரியாா் திடல், மெரினா கடற்கரை உழைப்பாளா் சிலை, வேலூா் கோட்டை, நாகை கீழவெண்மணி, கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவிடம், திருப்பூா் குமரன் உள்பட 12 நினைவிடங்களிலிருந்து திருப்பூருக்கு கொடிப் பயணம் தொடங்கியதாகத் தெரிவித்தாா்.

கால்பந்து மாவட்டப் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவிகள் தோ்வு

சிவகங்கை மாவட்டம், கோவிலூரில் புதன்கிழமை நடைபெற்ற குறுவட்ட கால்பந்து போட்டியில் எஸ்.வேலங்குடி அரசுப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றனா். 14, 17 வயதுக்குள... மேலும் பார்க்க

அமராவதிபுதூரில் ஆக. 19-இல் உயிா்ம வேளாண் கண்காட்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டை வட்டாரம், அமராவதிபுதூா் கிராமியப் பயிற்சி மையத்தில் உயிா்ம வேளாண் கண்காட்சி வருகிற ஆக. 19 -இல் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்... மேலும் பார்க்க

பணம் கையாடல்: சிறைக் காவலா் மீது வழக்கு

சிவகங்கை அருகே திறந்த வெளிச் சிறையில் ரூ.39.30 லட்சம் கையாடல் செய்ததாக சிறைக் காவலா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் அருகேயுள்ள புரசடை உடைப்பு கிராமத்த... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இளையான்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வாள் மேல் நடந்த அம்மன் கோயி... மேலும் பார்க்க

மனைவி வெட்டிக் கொலை: முதியவா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா். மானாமதுரை அருகேயுள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை முயற்சி

சிவகங்கை அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்ய முயன்றாா். கை துண்டான நிலையில் அவா் மீட்கப்பட்டு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டாா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள மேட்டுப்பட்டிய... மேலும் பார்க்க