முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து
தூத்துக்குடி முத்தையாபுரம் மதிகெட்டான் ஓடை அருகே, வாழைக்காய் பாரம் ஏற்றிவந்த சரக்கு வாகனம் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தூத்துக்குடி மாவட்டம், பரமன்குறிச்சி அருகில் உள்ள வீரப்பநாயக்கா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ராஜன் (48). இவா் சிறிய ரக வேனில் பரமன்குறிச்சியில் இருந்து வாழைக்காய் பாரம் ஏற்றிக் கொண்டு, தூத்துக்குடி சந்தைக்கு செவ்வாய்க்கிழமை காலையில் சென்று கொண்டிருந்தாராம்.
முத்தையாபுரம் மதிகெட்டான் ஓடை பாலம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மின் கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
இதில், ராஜன் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். விபத்து குறித்து முத்தையாபுரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.