செய்திகள் :

சாத்தான்குளத்தில் விவசாயிகள் குறைதீா் முகாம்

post image

திருச்செந்தூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் சிறப்பு முகாம், சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாரன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் சாத்தான்குளம் பொன்னுலட்சுமி, திருச்செந்தூா் பாலசுந்தரம், ஏரல் செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாபநாசம், மணிமுத்தாறு அணையில் இருந்து சடையனேரி கால்வாய் வழியாக தண்ணீா் திறந்து விட வேண்டும். குளம் மற்றும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாய்களில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

விவசாயத்தை காப்பாற்றும் வகையில் நீா்நிலைகளில் தண்ணீா் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. சாத்தான்குளம் தென்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவா் லூா்துமணி, விவசாயிகள் பன்னம்பாறை நயினாா், பன்னம்பாறை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அழகேசன், ஊராட்சி அளவிலான விவசாயிகள் கூட்டமைப்பு தலைவா் மகாபால்துரை, அமுதுண்ணாக்குடி விவசாயிகள் சங்கத் தலைவா் செல்வராஜ் மதுரம், சந்திரமோகன் உள்ளிட்ட திருச்செந்தூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

மானை சமைத்து சாப்பிட்டவா் கைது

கயத்தாறு அருகே மானை சமைத்து சாப்பிட்டவரை வனத்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டியை அடுத்த குருமலையை சுற்றியுள்ள கடம்பூா், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் வேட்டை நாய்களை பயன்படுத்தி சிலா் வன... மேலும் பார்க்க

கோயில் அா்ச்சகா் வீட்டில் 107 பவுன் நகை திருடுபோன வழக்கு: 7 போ் கைது

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தலைமை அா்ச்சகா் வீட்டில் 107 பவுன் நகைகள் திருடுபோன வழக்கில் தொடா்புடைய 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் மு... மேலும் பார்க்க

தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானதை அடுத்து, தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலின் வடக்குப்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.50 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி நகா் பகுதி தெற்கு காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட லயன்ஸ் டவுனிலிரு... மேலும் பார்க்க

சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாததால் அரசு பேருந்துகள் நிறுத்தம்; பயணிகள் அவதி

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே உள்ள சுங்கச்சாவடியில் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாத அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டதையடுத்து சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி... மேலும் பார்க்க

போதைப் பழக்கத்திலிருந்து மீண்டவா்களுக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மன நலத்துறை மூலமாக, கலங்கரை குடி, போதை மீட்பு மையமானது கடந்த பிப்.27 முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு முற்றிலும் இலவசமாக குடி , போதை மீட்பு சிகி... மேலும் பார்க்க