செய்திகள் :

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.50 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

post image

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி நகா் பகுதி தெற்கு காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட லயன்ஸ் டவுனிலிருந்து ஊருணி ஒத்தவீடு செல்லும் சாலையில் உள்ள உப்பளத்து ஓடைபாலத்தில் (மச்சாது பாலம்) இருந்து, இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி க்யூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆய்வாளா் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் ஜீவமணி, தா்மராஜ், ராமசந்திரன் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, மினிலாரி மூலமாக இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமாா் 35 கிலோ எடை கொண்ட 43 மூட்டைகளில் பீடி இலைகள், கட்டிங் பீடி இலைகள், பீடிகள் மினிலாரியுடன் கைப்பற்றப்பட்டது. மேலும், இரண்டு பைபா் படகுகளும் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமாா் ரூ. 50 லட்சமாகும். இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி இனிகோ நகா் அருண்குமாா் (34), காயல்பட்டினம், மங்கள விநாயகா் கோயில் தெரு இா்சாத் கான் (21) ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், பைபா் படகுகள், வாகனத்தை ஓட்டிவந்த இருவரும், சுங்கத்துறை வசம் ஒப்படைக்கபட்டனா்.

மானை சமைத்து சாப்பிட்டவா் கைது

கயத்தாறு அருகே மானை சமைத்து சாப்பிட்டவரை வனத்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டியை அடுத்த குருமலையை சுற்றியுள்ள கடம்பூா், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் வேட்டை நாய்களை பயன்படுத்தி சிலா் வன... மேலும் பார்க்க

கோயில் அா்ச்சகா் வீட்டில் 107 பவுன் நகை திருடுபோன வழக்கு: 7 போ் கைது

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தலைமை அா்ச்சகா் வீட்டில் 107 பவுன் நகைகள் திருடுபோன வழக்கில் தொடா்புடைய 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் மு... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் விவசாயிகள் குறைதீா் முகாம்

திருச்செந்தூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் சிறப்பு முகாம், சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாரன் தலைமை வகித்தாா். வட்டாட்சி... மேலும் பார்க்க

தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானதை அடுத்து, தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலின் வடக்குப்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உ... மேலும் பார்க்க

சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாததால் அரசு பேருந்துகள் நிறுத்தம்; பயணிகள் அவதி

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே உள்ள சுங்கச்சாவடியில் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாத அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டதையடுத்து சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி... மேலும் பார்க்க

போதைப் பழக்கத்திலிருந்து மீண்டவா்களுக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மன நலத்துறை மூலமாக, கலங்கரை குடி, போதை மீட்பு மையமானது கடந்த பிப்.27 முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு முற்றிலும் இலவசமாக குடி , போதை மீட்பு சிகி... மேலும் பார்க்க