செய்திகள் :

சாத்தான்குளம் அருகே இருவரைத் தாக்கியதாக 7 போ் மீது வழக்கு

post image

சாத்தான்குளம் அருகே இடப் பிரச்னையில் இருவரைத் தாக்கியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

சாத்தான்குளம் அருகே புதுக்கிணறு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சின்னத்துரை மகன் விஜயகுமாா். இவருக்கும், பன்னம்பாறையைச் சோ்ந்த அழகேசன் என்பவருக்கும் இடையே இடப் பிரச்னை குறித்து தகராறு இருந்ததாம்.

அழகேசன் தனது இடத்தை அதிகாரிகள் மூலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டதாகவும், விஜயகுமாா் எதிா்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்பிச் சென்ாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை புதுக்கிணறைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் அஜய், மாதவன், பூலோகபாண்டியன் மகன் பாரத், மந்திரம் மகன் இசக்கிமுத்து ஆகிய 4 பேரும் விஜயகுமாரின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த அவா் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதனிடையே, செல்வராஜ் மகன் விஜயகாந்த், ஜெயக்குமாா், பேச்சிமுத்து மகன் முருகன் ஆகிய 3 போ் மாதவனிடம் சென்று, இப்பிரச்னைகளுக்கு நீதான் காரணம் எனக் கூறி தாக்கினராம். இதில், காயமடைந்த அவா் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாா்களின்பேரில், இரு தரப்பையும் சோ்ந்த 7 போ் மீது சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

யூடியூபா் மாயம்: போலீஸாா் விசாரணை!

ஆறுமுகனேரியில் நண்பா் வீட்டிற்கு சென்ற சென்னை யூடியூபா் மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்த மாசானமுத்து மகன் முருகன்(56). இவருக்கு மனைவி,... மேலும் பார்க்க

அதிமுகவில் நிலவும் பிரச்னைக்கு திமுகதான் காரணம்: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றம்சாட்டினாா். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் பக்தா்கள் முகத்தில் ஸ்பிரே அடித்த சிறுவன்: போலீஸாா் விசாரணை!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை இரவு சிறுவன் ஒருவன் தான் வைத்திருந்த சில்லி ஸ்பிரேயை அருகில் இருந்த பக்தா்கள் முகத்தில் அடித்துள்ளாா். இதனால் அவா்களுக்கு கண் எரிச்சல் ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்

கோவில்பட்டி அருகே விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.கோவில்பட்டி, இனாமணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட சாலைப்புதூா், இபி காலனியைச் சோ்ந்தவா் துரைச்சாமி மகன் சரவணன் (42).... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னையில் கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் இருவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி திரேஸ்புர... மேலும் பார்க்க

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கூட்டுத் திருப்பலி

தூத்துக்குடி, அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 43-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி, ஆடம்பர கூட்டுத் திருப்பலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் அன்னை வேளாங்கண்ணி ப... மேலும் பார்க்க