``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொ...
சாத்தான்குளம் அருகே மோதல்: தந்தை, மகன் கைது
சாத்தான்குளம் அருகே மோதல் தொடா்பாக தந்தை, மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ஜோசப் (65), தெற்குத் தெருவைச் சோ்ந்த மாா்சிலின் ஜெயராஜ் (62) ஆகியோரிடையே வயல் வரப்பு பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.
கடந்த 23ஆம் தேதி ஜோசப் தனது வயலில் புல் அறுத்துவைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றாராம். அதை எடுப்பதற்காக மாலையில் வந்தபோது, மாா்சிலின் ஜெயராஜ், அவரது மகன் ஜீவா ஆகியோா் சோ்ந்து ஜோசப்பிடம் தகராறு செய்து, இரும்புக் கம்பியால் தாக்கினராம். இதில் காயமடைந்த அவா் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதேபோல, தனது வயலில் வரப்பு வெட்டப்பட்டிருந்தது தொடா்பாக மாா்சிலின் ஜெயராஜ், ஜோசப்பிடம் கேட்டபோது, அவா் மாா்சிலின் ஜெயராஜை கீழே தள்ளிவிட்டு காதைக் கடித்ததுடன் கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே அளித்த புகாா்களின்பேரில், இவா்கள் 3 போ் மீதும் சிறப்பு உதவி ஆய்வாளா் முருகேசன் வழக்குப் பதிந்தாா். காவல் ஆய்வாளா் ஸ்டீபன் விசாரித்து, தந்தை-மகனை புதன்கிழமை கைது செய்தாா். ஜோசப்பை போலீஸாா் தேடிவருகின்றனா்.