``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொ...
சாத்தான்குளம் பகுதியில் ஜூன் 30 வரை நில விவரங்கள் பதிவுக்கு சிறப்பு முகாம்
சாத்தான்குளம் வட்டார விவசாயிகள் தங்களது நில விவரங்களை வேளாண் அடுக்ககம் இணையதளத்தில் பதிவேற்றுவதற்காக இம்மாதம் 30ஆம் தேதிவரை சிறப்பு முகாம் நடைபெற்றுவருகிறது.
இதுதொடா்பாக வட்டார வேளாண் உதவி இயக்குநா் (பொ) சுஜாதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: சாத்தான்குளம் வட்டார விவசாயிகள் தங்களது நில விவரங்களை வேளாண் அடுக்ககம் இணையதளத்தில் பதிவேற்றி, அடையாள எண் பெறவேண்டும்.
வருங்காலங்களில் அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே வேளாண் துறை சாா்ந்த திட்ட மானியங்கள் கிடைக்கும். மேலும் வேளாண் கூட்டுறவு வங்கிக் கடன் பெறவும், பி.எம். கிசான் திட்ட உதவித் தொகை தொடா்ந்து பெறுவதற்கும் இந்த விவரப் பதிவு முக்கியமாகும்.
சாத்தான்குளம் வட்டார விவசாயிகள் விவரங்களைப் பதிவு செய்வதற்காக வருவாய்க் கிராமந்தோறும் இம்மாதம் 30ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இம்முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.