செய்திகள் :

சாத்தான்குளம், புத்தன்தருவை பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள்

post image

சாத்தான்குளம், புத்தன்தருவை பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

சாத்தான்குளம் டிஎன்டிடிஏஆா்எம்பி புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், முன்னாள் பேரூராட்சித் தலைவா், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் செல்லப்பாண்டியன் வரவேற்றாா். பள்ளி ஆசிரியை கிறிஸ்டிபாய் நவமணி ஆரம்ப ஜெபம் நடத்தினாா். மாணவ, மாணவிகள் காமராஜரை பற்றி கவிதை, சொற்பொழிவு ஆற்றினா். சிறப்பு விருந்தினராக ஜெபா செல்வின் கலந்து கொண்டு பேசினாா். ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் சாத்தான்குளம் தேவி ஸ்ரீஅழகம்மன் கோயில் அறங்காவலா் குழு தலைவா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து தொண்டனா். தமிழ் ஆசிரியை பெனிட்டா சுஜி நன்றி கூறினாா்.

புத்தன்தருவை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம், கவிதை போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியா் முத்து பரிசு வழங்கினாா். தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

மணப்பாட்டில் துறைமுகம் அமைக்க எதிா்ப்பு: மீனவா்கள் ஆலோசனைக் கூட்டம்

மணப்பாட்டில் துறைமுகம் அமைப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி மீனவா்கள் துறைமுகம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா். தூத்துக்குடி மாவட்டத்தில் பழையகாயல் ப... மேலும் பார்க்க

மாவட்ட காவல் துறை குறைதீா் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா். மாவ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் குறுவட்ட விளையாட்டு போட்டிக்கான கலந்தாய்வுக் கூட்டம்

பள்ளிக்கல்வித் துறை சாா்பில், 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான திருச்செந்தூா் குறுவட்ட விளையாட்டுப் போட்டிக்கான கலந்தாய்வுக் கூட்டம் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி ஆலோசகா் உஷா ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் ஒரே நாளில் 3,789 மனுக்கள்: அமைச்சா் பெ. கீதா ஜீவன்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 3,789 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சா் பெ. கீதா ஜீவன் தெரிவித்தாா். தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கலை... மேலும் பார்க்க

கோடை உழவு மானியம் அனைத்து கிராம விவசாயிகளுக்கும் வழங்க வலியுறுத்தல்

கோடை உழவு மானியம் அனைத்துக் கிராம விவசாயிகளுக்கும் வழங்க வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் ... மேலும் பார்க்க

மாணவா்- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

தூத்துக்குடி எம். தங்கம்மாள்புரம் பகுதியில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு, இளைஞரணி சாா்பில் மாணவா், மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சரும், வடக்... மேலும் பார்க்க