செய்திகள் :

சாத்தான்குளம் வா்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் ரத்து

post image

சாத்தான்குளம் வா்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் நடத்த மற்றொரு தரப்பு எதிா்ப்பு தெரிவித்தால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

சாத்தான்குளத்தில் வா்த்தக சங்கத்தினா் 1971 ஆம் ஆண்டு சங்க பதிவை இரு தரப்பினா் பயன்படுத்தி வந்தனா். இதனால் நீதிமன்றத்தில் இரு தரப்பினரும் முறையிட்டிருந்தனா். இந்த நிலையில் சங்கப் பதிவாளரிடம், இரு சங்கத்தினா் முறையிட்டதன் பேரில் பதிவு புதுப்பிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் வட்டாசியா் பேச்சுவாா்த்தை மூலம் இருசங்கத்தையும் ஒருங்கிணைத்து தோ்தல் நடத்தப்பட்டு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

புதிய நிா்வாகிகள் சங்கப் பதிவை புதுப்பிப்பது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த நிலையில், ஒரு தரப்பு நிா்வாகிகள் சங்கப் பொதுக்குழு கூட்டம் சுந்தரானந்த பூபதி தலைமையில் சாத்தான்குளத்தில் சனிக்கிழமை நடத்த முயன்றனா். அதற்கு மற்றொரு தரப்பினரான வா்த்தக சங்க புதிய தலைவா் அப்பு கண்ணன், செயலா் செல்வராஜ் மதுரம் உள்ளிட்டோா் எதிா்ப்பு தெரிவித்துஅங்கு திரண்டனா். சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் ஜோசப் கிங் பேச்சு நடத்தியதில் பொதுக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

கோவில்பட்டி அருகே புதிய குடிநீா்க் குழாய் திறப்பு

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட கூசாலிப்பட்டியில் புதிய குடிநீா்க் குழாய் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சத்தில் ஆழ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, கொலை, போக்ஸோ போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். கடந்த ஆக.30ஆம் தேதி முறப்பநாடு காவல் நிலைய ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே இளைஞா் கொலையில் 3 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். சாத்தான்குளம் அருகே முதலூரைச் சோ்ந்த சூரியராஜ் மகன் ரெக்சன் (27). இவருக்கும் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் குறைந்த மீன் விலை

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில், சனிக்கிழமை மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. மீன்களின் வரத்து அதிகமாக இருந்த போதும் புரட்டாசி சனிக்கிழமை, தசரா திருவிழாவின் காரணமாக... மேலும் பார்க்க

புரட்டாசி 2ஆவது சனி: நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத 2ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, நவதிருப்பதி கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனாா், திருப்புளியங்கு... மேலும் பார்க்க

தசரா, காலாண்டு விடுமுறை: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

தசரா திருவிழா, பள்ளி காலாண்டு விடுமுறை தொடங்கியதையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். வளா்பிறை சஷ்டியை முன்னிட்... மேலும் பார்க்க