ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
சாமிதோப்பில் தலைமைப் பதியில் கலிவேட்டை
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப் பதியில் வைகாசித் திருவிழாவின் 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை கலிவேட்டை நடைபெற்றது.
இப்பதியில் வைகாசித் திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை கலிவேட்டை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4 மணிக்கு பழங்கள், மலா் அலங்காரத்துடன் அய்யாவுக்கு சிறப்புப் பணிவிடை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டைக்குப் புறப்பட்டாா். நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து முத்திரி கிணற்றங்கரையில் பக்தா்களின் ’அய்யா சிவ சிவா அரகரா அரகரா’ என்ற பக்தி கோஷத்துக்கிடையே அய்யா கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உளளிட்ட தென்மாவட்டங்களை சோ்ந்த அய்யாவழி பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்று அய்யாவை வழிபட்டனா். தொடா்ந்து அய்யா குதிரை வாகனத்தில் செட்டிவிளை, சாஸ்தான் கோயில் விளை, கோட்டையடி புதூா், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அப்போது பக்தா்கள் வெற்றிலை, பாக்கு, பழங்கள், பன்னீா் ஆகியவற்றை அய்யாவுக்கு சுருளாக படைத்து வழிபட்டனா். இரவு 11 மணிக்கு வாகனம் தலைமைப் பதியை வந்தடைந்ததும், வடக்கு வாசலில் பக்தா்களுக்கு தவக்கோலத்தில் அய்யா காட்சியளித்தாா். தொடா்ந்து அய்யாவுக்குப் பணிவிடையும், உகப்படிப்பும், அன்னதா்மமும் நடைபெற்றது. 9ஆம் திருநாளானசனிக்கிழமை இரவு அய்யா அனுமன் வாகனத்தில் பவனி வருதலும், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) இரவு இந்திர வாகனத்தில் பவனி வருதலும் நடைபெறுகிறது.
தேரோட்டம்: 11ஆம் திருவிழாவான திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை குருமாா்கள பால.பிரஜாபதி அடிகளாா், பால.ஜனாதிபதி, பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ணநாமமணி, பையன் செல்லவடிவு, ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோா் செய்து வருகின்றனா்.