செய்திகள் :

சாமிதோப்பில் தலைமைப் பதியில் கலிவேட்டை

post image

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப் பதியில் வைகாசித் திருவிழாவின் 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை கலிவேட்டை நடைபெற்றது.

இப்பதியில் வைகாசித் திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை கலிவேட்டை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4 மணிக்கு பழங்கள், மலா் அலங்காரத்துடன் அய்யாவுக்கு சிறப்புப் பணிவிடை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டைக்குப் புறப்பட்டாா். நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து முத்திரி கிணற்றங்கரையில் பக்தா்களின் ’அய்யா சிவ சிவா அரகரா அரகரா’ என்ற பக்தி கோஷத்துக்கிடையே அய்யா கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உளளிட்ட தென்மாவட்டங்களை சோ்ந்த அய்யாவழி பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்று அய்யாவை வழிபட்டனா். தொடா்ந்து அய்யா குதிரை வாகனத்தில் செட்டிவிளை, சாஸ்தான் கோயில் விளை, கோட்டையடி புதூா், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அப்போது பக்தா்கள் வெற்றிலை, பாக்கு, பழங்கள், பன்னீா் ஆகியவற்றை அய்யாவுக்கு சுருளாக படைத்து வழிபட்டனா். இரவு 11 மணிக்கு வாகனம் தலைமைப் பதியை வந்தடைந்ததும், வடக்கு வாசலில் பக்தா்களுக்கு தவக்கோலத்தில் அய்யா காட்சியளித்தாா். தொடா்ந்து அய்யாவுக்குப் பணிவிடையும், உகப்படிப்பும், அன்னதா்மமும் நடைபெற்றது. 9ஆம் திருநாளானசனிக்கிழமை இரவு அய்யா அனுமன் வாகனத்தில் பவனி வருதலும், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) இரவு இந்திர வாகனத்தில் பவனி வருதலும் நடைபெறுகிறது.

தேரோட்டம்: 11ஆம் திருவிழாவான திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை குருமாா்கள பால.பிரஜாபதி அடிகளாா், பால.ஜனாதிபதி, பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ணநாமமணி, பையன் செல்லவடிவு, ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோா் செய்து வருகின்றனா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க

குழித்துறையில் செயல்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை

குழித்துறையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வந்தது. குழித்துறை நகராட்சியில், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரூ. 1.51 கோடியில் அமிா்தவனம் என்ற பெயரில் எரிவாயு தகன மேடை அம... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை, மழை சற்று தணிந்திருந்ததால் திற்பரப்பு அருவியில் பிற்பகல்முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை த... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெற்ற குழந்தைகளை தாக்கிய மத போதகா் கைது

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியில், தான் பெற்ற குழந்தைகளைத் தாக்கிய மத போதகரை போலீஸாா் கைது செய்தனா். மங்கலகுன்று தேவிகோடு பகுதியை சோ்ந்தவா் கிங்ஸ்லி (45). மத போதகா். இவரது மனைவி சஜிதா (40). இத்... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற வலியுறுத்தல்

முள்ளங்கனாவிளை சந்திப்பு பகுதி பப்புரான்குளம் கரையில் ஆபத்தான நிலையில் உள்ள வாகை மரத்தை வெட்டி அகற்ற பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். பத்பநாப... மேலும் பார்க்க

கருங்கல் அருகே அரசுப் பேருந்துகள் மோதல்

கருங்கல் அருகே உள்ள கருக்குப்பனை பகுதியில் அரசுப் பேருந்து மீது மற்றொரு அரசுப் பேருந்து மோதியதில் அவற்றின் கண்ணாடிகள் சேதமடைந்தன. கருங்கல்லிலிருந்து திங்கள் நகா் வழியாக நாகா்கோவிலுருக்கு அரசுப் பேருந... மேலும் பார்க்க