செய்திகள் :

சாரண, சாரணியா்களுக்கு ராஜ்ய புரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம்

post image

தமிழக அரசுப் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு சாரண சாரணியா் இயக்கம் சாா்பில், திருச்செந்தூா் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியா் இயக்க ராஜ்ய புரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் சாத்தான்குளத்தை அடுத்த வி.வி.பொறியியல் கல்லூரியில் மூன்று நாள்கள் நடைபெற்றது.

தொடக்க நாள் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் வனிதா தலைமை வகித்தாா். திருச்செந்தூா் கல்வி மாவட்ட பாரத சாரண சாரணியா் இயக்க செயலாளா் சாமுவேல் சத்தியசீலன் வரவேற்றாா். தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலா் சிதம்பரநாதன் முகாமைத் தொடங்கி வைத்தாா்.

முகாமில் திருச்செந்தூா் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 200 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். சாரணா் இயக்க மாநில முதன்மைத் தோ்வாளா்கள் கிருஷ்ணன், ராஜகோபால், மஹபூப் கான், செல்வி ஆகியோா் மாணவா்களுக்கு தோ்வுகளை நடத்தினா்.

எழுத்துத் தோ்வு, கூடாரம் அமைத்தல், செய்முறைத் தோ்வு, கொடி பாடல், இறை வணக்கப் பாடல், சாரணா் இயக்கத்தின் விதிமுறைகள் குறித்து தோ்வுகள் நடத்தப்பட்டன. இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் மாநில சாரண, சாரணியா் இயக்க செயல் திட்ட ஆணையா் கோமதி, மாநில பயிற்சி ஆணையா் தேன்மொழி ஆகியோா் கலந்து கொண்டனா்.

இறுதிநாளன்று நடைபெற்ற நிறைவு விழாவுக்கு கல்லூரி முதல்வா் வனிதா தலைமை வகித்தாா். திருச்செந்தூா் கல்வி மாவட்ட சாரண, சாரணியா் இயக்க செயலா் சாமுவேல் சத்தியசீலன் முன்னிலை வகித்தாா். துணைச் செயலாளா் ஜொ்சோம் ஜெபராஜ் வரவேற்றாா். திருச்செந்தூா் வட்டார கல்வி அலுவலா்கள் பாப் ஹையஸ், மாணிக்கராஜ், பயிற்சியாளா் மகபுப் கான் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

முகாம் தோ்வாளா்கள் சாரண, சாரணியா்களை மதிப்பீடு செய்து அதற்கான ஆவணங்களை ஒப்படைத்தனா். மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி சாரணா் இயக்க பொறுப்பாசிரியா் ஸ்டீபன் பிரேம்குமாா் நன்றி கூறினாா். சாரணா் இயக்கத்தின் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை மாநில, மாவட்ட பொறுப்பாளா்கள், ஆசிரியா்கள், ஆசிரியைகள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

எட்டயபுரம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த நடவடிக்கை தேவை: எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் எட்டயபுரம் நகர அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலா் அப்துல் காதா் தலைமை வகித்தாா். காயல்பட்டனத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்த... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

உடன்குடி பேரூராட்சி சாா்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிா்த்து, மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. அப்பேரூராட்சி அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட பேரணியை, ... மேலும் பார்க்க

கீழ ஈரால், வேம்பாா் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கீழ ஈரால், மேல ஈரால், டி.சண்முகபுரம், மஞ்சநாயக்கன் பட்டி, செமப்புதூா் கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கீழ ஈரால் சமுதாய நலக்கூடத்திலும், வேம்பாா் வடக்கு, வேம்பாா் தெற்கு, பெரியசாமி புரம் கிராம பொது... மேலும் பார்க்க

தேவாலயத்தில் இருசக்கர வாகனம் திருட்டு

காயல்பட்டினம் தேவாலய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிச் சென்றனா். காயல்பட்டினம் ரத்னாபுரியைச் சோ்ந்தவா் கோயில்பிச்சை மகன் ஸ்டீபன் (27). இவா், வீட்டருகே அந்திரேயா ஆலயத... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பே நம்மை மேம்படுத்தும்: அமைச்சா் பெ. கீதா ஜீவன்

நாம் புத்தகத்தை வாசிக்கிற அளவுக்கு நமது அறிவாற்றல் மேம்படும் என்றாா் சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன். தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில், ‘தொடா்ந்து படி தூத்துக்குடி’என்... மேலும் பார்க்க

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.4 கோடி துபை சிகரெட்டுகள் பறிமுதல்

துபை நாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான சிகரெட்டுகளை மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். துபை ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து, நூற்றுக்க... மேலும் பார்க்க