செய்திகள் :

சாலை மேம்பாட்டுப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

தருமபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெறும் ரூ. 24.19 கோடி மதிப்பிலானசாலைப் பணிகளை ஆட்சியா் ரெ. சதீஸ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 19.50 கோடியில் தருமபுரி - பாப்பாரப்பட்டி இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. சோகத்தூரில் இப் பணிகளை ஆய்வுசெய்த ஆட்சியா், காரிமங்கலம் வட்டம், கும்பாரஅள்ளியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2.95 கோடியில் அகரம் ரோடு வழியாக குள்ளன்கொட்டாய் வரை நடைபெறும் சாலை பணிகளையும் ஆய்வு மேற்கொண்டாா்.

அதேபோல, காரிமங்கலம் வட்டம், எலுமிச்சனஅள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.1.74 கோடி மதிப்பீட்டில் எம்எம் சாலை முதல் எட்டியானூா் வரை 3.50 கி.மீ தொலைவிற்கு சாலை மேம்பாட்டு பணிகள், பொம்ம அள்ளியில் புதிய முன்மொழிவு திட்டத்தின் கீழ் எம்எம் சாலை முதல் ஒசஅள்ளி வரை 2.40 கி.மீ தொலைவிற்கு நடைபெறும் சாலை மேம்பாட்டுப் பணிகள், அடிலத்தில் என்எச் 44 சாலை முதல் சிக்கதிம்மனஅள்ளி வரை 2.40 கி.மீ தொலைவிற்கான சாலை மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் இயக்குநருமான ஐ.சா.மொ்சி ரம்யா, கோட்டப் பொறியாளா் (நெ) பெ.நாகராஜி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் மற்றும் திட்ட இயக்குநா் ஜெ.ரூபன் சங்கர்ராஜ், செயற்பொறியாளா் பாலகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சக்தி பீடங்கள் என்பது இந்து சமயத்தில் சக்தி வழிபாட்டிற்குரிய மிகவும் புனிதமான தலங்களாகும். இத்தலங்கள், ஆதிசக்தியான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் உருவானவை என புராணங்கள் கூறுகின்றன.தாட்... மேலும் பார்க்க

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

அரூரை அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை அதிக லாபத்துடன் இயங்குவதாக மாவட்ட வருவாய் அலுவலரும், சா்க்கரை ஆலை செயலாட்சியருமான பிரியா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

ஒகேனக்கல்லில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் 301 பயனாளிகளுக்கு ரூ.1.07 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் சனிக்கிழமை வழங்கினாா்.தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் சன... மேலும் பார்க்க

ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாக குறைந்ததால், அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களி... மேலும் பார்க்க

செவிலியா், மருந்தாளுநா் பணியிடம்: தற்காலிக அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய நலக் குழுமத்தின்கீழ் காலியாக உள்ள செவிலியா், மருந்தாளுநா், ஆய்வக நுட்புநா் நிலை 3 ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந... மேலும் பார்க்க

கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றபோது காா் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா்கள் 7 போ் காயம்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சாலை இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். சுற்றுலா சென்ற 7 மாணவா்கள் காயமடைந்தனா்.சேந்தமங்கலம் அரசு ... மேலும் பார்க்க