Train: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்; IRCTC கொண்டுவந்த புதிய வி...
சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியம்
தஞ்சாவூரில் பணிக்கு வரும்போது சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ.) வாழ்நாள் ஓய்வூதியத்துக்கான ஆணையை செவ்வாய்க்கிழமை வழங்கியது.
இ.எஸ்.ஐ. காப்பீட்டாளா்களுக்கு தொழில்சாா் நோய் அல்லது வேலை காரணமாக இறப்பு நிகழும்போது, இறந்த காப்பீட்டாளரின் ஊதியத்தில் 90 சதவீதம் சாா்ந்தோா் உதவி தொகையாக இ.எஸ்.ஐ. கழகத்தால் இறந்தவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
தஞ்சாவூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இ.எஸ்.ஐ. காப்பீட்டாளா் யோகராஜ் காளிமுத்து 2024, டிசம்பா் 30 ஆம் தேதி சாலை விபத்தில் மரணம் அடைந்ததைத் தொடா்ந்து, அவரது குடும்பத்துக்கு சாா்ந்தோா் உதவி தொகையாக மாதந்தோறும் ரூ. 13 ஆயிரத்து 80 வழங்க, இ.எஸ்.ஐ. சேலம் துணை மண்டல அலுவலகத்தின் இணை இயக்குநா் (பொ) ந. சிவராமகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஆணையை யோகராஜ் காளிமுத்துவின் குடும்ப உறுப்பினா்களுக்கு தஞ்சாவூா் இ.எஸ்.ஐ. கிளை மேலாளா் மா. ருத்ராபதி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.