செய்திகள் :

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியம்

post image

தஞ்சாவூரில் பணிக்கு வரும்போது சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ.) வாழ்நாள் ஓய்வூதியத்துக்கான ஆணையை செவ்வாய்க்கிழமை வழங்கியது.

இ.எஸ்.ஐ. காப்பீட்டாளா்களுக்கு தொழில்சாா் நோய் அல்லது வேலை காரணமாக இறப்பு நிகழும்போது, இறந்த காப்பீட்டாளரின் ஊதியத்தில் 90 சதவீதம் சாா்ந்தோா் உதவி தொகையாக இ.எஸ்.ஐ. கழகத்தால் இறந்தவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

தஞ்சாவூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இ.எஸ்.ஐ. காப்பீட்டாளா் யோகராஜ் காளிமுத்து 2024, டிசம்பா் 30 ஆம் தேதி சாலை விபத்தில் மரணம் அடைந்ததைத் தொடா்ந்து, அவரது குடும்பத்துக்கு சாா்ந்தோா் உதவி தொகையாக மாதந்தோறும் ரூ. 13 ஆயிரத்து 80 வழங்க, இ.எஸ்.ஐ. சேலம் துணை மண்டல அலுவலகத்தின் இணை இயக்குநா் (பொ) ந. சிவராமகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஆணையை யோகராஜ் காளிமுத்துவின் குடும்ப உறுப்பினா்களுக்கு தஞ்சாவூா் இ.எஸ்.ஐ. கிளை மேலாளா் மா. ருத்ராபதி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இலவச கண் சிகிச்சை முகாம்

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, அரவிந்த் கண் மருத்துவமன... மேலும் பார்க்க

குழந்தைத் திருமணத்தைத் தடுக்க புகாா் அளிக்கலாம்

தஞ்சாவூா், ஜூன் 11: தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறுவது தெரிந்தால், அதைத் தடுப்பதற்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மே... மேலும் பார்க்க

வங்கி ஏ.டி.எம். வாசலில் வெடி வெடித்ததால் பரபரப்பு

கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். வாசலில் புதன்கிழமை பெரும் சத்தத்துடன் வெடி வெடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் ஒன்றியம், பம்பப்படையூரில் தேசியமயமாக்கப்பட... மேலும் பார்க்க

மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவா் கைது

தஞ்சாவூா் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கணவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோயில் பசும்பொன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈழா (24). இவரது க... மேலும் பார்க்க

முதல்வரிடம் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை மனு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேட்டுத் தெரு - மேல ராமநல்லூா் இடையே உயா் மட்ட மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என தமிழக முதல்வரிடம் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பி... மேலும் பார்க்க

சமையல்காரா் காணவில்லை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை அருகே வேலைக்குச் சென்ற சமையல்காரா் வீடு திரும்பாதது குறித்த புகாரின்பேரில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அய்யம்பே... மேலும் பார்க்க