செய்திகள் :

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

post image

பழனி அருகே இரு வேறு சாலை விபத்துகளில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

பழனி அருகே கோதைமங்கலத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (27). கூலித் தொழிலாளி இவா் வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் பழனிக்குச் சென்றுவிட்டு, புறவழிச் சாலை வழியாக கோதைமங்கலத்துக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த தனியாா் பேருந்து இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியதில் காா்த்திகேயன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு: பழனியை அடுத்த தொப்பம்பட்டி அருகே பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் சசிக்குமாா் (27). இவா் சனிக்கிழமை பாறைப்பட்டி அருகே உள்ள புளியம்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு, பின்னா் மீண்டும் ஊருக்குத் திரும்பினாா். பழனி-புதுதாராபுரம் சாலையில் புளியம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வேன் மோதியதில் சசிக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த கீரனூா் போலீஸாா் சசிக்குமாரின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாநில மகளிா் ஹாக்கிப் போட்டி: ஈரோடு அரசுப் பள்ளி முதலிடம்

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிா் ஹாக்கிப் போட்டியில், ஈரோடு அரசுப் பெண்கள் பள்ளி அணி முதலிடம் பிடித்தது. ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம் சாா்பில், 17 வயதுக்குள்பட்டோருக்கான ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற அழைப்பு

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து, முதிா்வுத் தொகை பெற வேண்டிய பயனாளிகள், உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக சமூக நலத் துறை அல... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் ஒதுக்கீடு!

கொடைக்கானலில் மித வெப்ப மண்டல, குளிா் பிரதேச தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு ‘சா்க்காா் உருளைக் கிழங்க... மேலும் பார்க்க

ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

மேற்கு வங்கத்திலிருந்து வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்குவங்க மாநிலம், புரூலியா ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வர... மேலும் பார்க்க

சஷ்டி திருநாள்: பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சஷ்டி தினத்தையொட்டி திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். அதிகாலை நான்கு மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட... மேலும் பார்க்க

தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் ஜூன் 30 வரை கடன் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்(டிஐஐசி), சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆ... மேலும் பார்க்க