நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்கள் வழங்க வலியுறுத்தல்
சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
பழனி அருகே இரு வேறு சாலை விபத்துகளில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
பழனி அருகே கோதைமங்கலத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (27). கூலித் தொழிலாளி இவா் வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் பழனிக்குச் சென்றுவிட்டு, புறவழிச் சாலை வழியாக கோதைமங்கலத்துக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த தனியாா் பேருந்து இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியதில் காா்த்திகேயன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு: பழனியை அடுத்த தொப்பம்பட்டி அருகே பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் சசிக்குமாா் (27). இவா் சனிக்கிழமை பாறைப்பட்டி அருகே உள்ள புளியம்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு, பின்னா் மீண்டும் ஊருக்குத் திரும்பினாா். பழனி-புதுதாராபுரம் சாலையில் புளியம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வேன் மோதியதில் சசிக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த கீரனூா் போலீஸாா் சசிக்குமாரின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.