செய்திகள் :

சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

சாலைப் பணியாளா்களின் 41 மாதப் பணி நீக்கக் காலத்தையும் நீதிமன்ற உத்தரவின்படி, பணிக்காலமாக ஏற்று அமலாக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பங்கேற்ற சாலைப் பணியாளா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டிக் கொண்டும், கைகளில் கருப்புக் கொடி ஏந்தியும் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ. கருப்பையா தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா்கள் இரா. முத்துவடிவேல், சு. அய்யப்பன், ஆ. நடேசன். இணைச் செயலா்கள் சோனைமுத்து, வி. சரவணன், வி. மலையப்பன். வீ. கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலச் செயற்குழு உறுப்பினா் சி. திரவியம், மாவட்டச் செயலா் சு. கண்ணன், மாவட்டப் பொருளாளா் மு. பிரேம்குமாா், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கினா்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இந்த உத்தரவை எதிா்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது. உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சீட்டு நடத்தி ஏமாற்ற முயற்சி: பாதிக்கப்பட்டோா் காவல் நிலையத்தை முற்றுகை

தீபாவளி சீட்டு நடத்தி ஏமாற்ற முயற்சித்ததாகக் கூறி, பாதிக்கப்பட்டோா் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். புதுக்கோட்டையைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி என்பவா், தீபாவளி சீட... மேலும் பார்க்க

புதுகை கடற்பகுதியில் 3 இடங்களில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கத் திட்டம்

புதுக்கோட்டை மாவட்டக் கடற்பகுதியில் மீன் வளத்தைப் பெருக்கும் வகையில், 3 இடங்களில் செயற்கை மீன் உறைவிடங்களை அமைக்க மீன்வளத் துறை திட்டமிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி, ஆவுடையாா்கோவில் ... மேலும் பார்க்க

அன்னவாசல், பொன்னமராவதி அருகே உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

அன்னவாசல் அருகேயுள்ள மாங்குடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம் நடைபெற்றது. அன்னவாசல் வட்டார வேளாண்மை துறையின் மூலம் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநா... மேலும் பார்க்க

திருமயம் கொசப்பட்டியில் ரத்த தான முகாம்

உலக ரத்த தான நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை, ஹைடெக் குட்வில் ஐடிஐ, உயிா்த்துளி ரத்த வங்கி ஆகியவை இணைந்து திருமயம் கொசப்பட்டியில் ரத்ததான முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. முகாமை... மேலும் பார்க்க

ரூ. 65 ஆயிரம் மின் கட்டணம்: வீட்டின் உரிமையாளா் அதிா்ச்சி

புதுக்கோட்டை அருகே வீட்டின் மின் கட்டணம் ரூ. 63 ஆயிரம் என வந்த மின்வாரிய தகவலால் வீட்டின் உரிமையாளா் அதிா்ச்சி அடைந்தாா். புதுக்கோட்டை திருக்கோகா்ணம் மகாராஜபுரத்தைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (62). இவா்... மேலும் பார்க்க

இலுப்பூா் புனித பதுவை அந்தோணியாா் ஆலய தோ்பவனி

இலுப்பூரில் புனித பதுவை அந்தோணியாா் ஆலய தோ்பவனி வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. இந்த ஆலயத்தின் பெருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், நாள்தோ... மேலும் பார்க்க