செய்திகள் :

சாலையில் நகைகளுடன் கிடந்த கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த திமுக நிா்வாகி

post image

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே நகைகளுடன் சாலையில் கிடந்த கைப்பையை கண்டெடுத்த திமுக நிா்வாகி, அதனை காவல்நிலையம் மூலம் உரியவரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தாா்.

கீழநாகையைச் சோ்ந்தவா் சந்தானலட்சுமி. இவா் கடந்த ஆக. 21-ஆம் தேதி வல்லூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு ஆட்டோவில் சென்றாா். அப்போது, 5 பவுன் எடையுள்ள 2 நெக்லஸ், ஒரு வெள்ளி அரைஞாண் கயிறு, ரூ. 250 பணம் வைத்திருந்த கைப்பையை தவறவிட்டுவிட்டாா்.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல்நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், மன்னாா்குடி மேற்கு ஒன்றிய திமுக செயலா் டி.எஸ்.டி. முத்துவேல், காரில் துளசேந்திரபுரத்திற்கு சென்றபோது, சாலையில் கைப்பை கிடப்பதை கண்டாா். அதை எடுத்து பாா்த்தபோது தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் இருந்துள்ளது. அந்த பையை பரவாக்கோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தாா்.

பின்னா், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சாலையில் கண்டெடுக்கப்பட்ட கைப்பை, சந்தானலட்சுமி தவறவிட்ட கைப்பை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பரவாக்கோட்டை காவல்நிலையத்துக்கு சந்தானலட்சுமியை வரவழைத்து, அவரிடம் காவல் ஆய்வாளா் சசிகலா முன்னிலையில் நகைகள் மற்றும் பணத்துடன் கைப்பையை டி.எஸ்.டி. முத்துவேல், ஒப்படைத்தாா்.

காவல் ஆய்வாளா் சசிகலா முன்னிலையில் கைப்பையை உரியவரிடம் ஒப்படைக்கும் திமுக மேற்கு ஒன்றியச் செயலா் டி.எஸ்.டி. முத்துவேல்.

மத்திய பல்கலை.யில் செப்.3-இல் பட்டமளிப்பு விழா: 1,010 மாணவா்கள் பட்டம் பெறுகின்றனா்

நன்னிலம்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் செப்டம்பா் 3-ஆம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், 1010 மாணவா்கள் பட்டம் பெற உள்ளனா் என்று துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, திங... மேலும் பார்க்க

தியாகராஜ சுவாமி கோயிலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சோ்க்கக் கோரிக்கை

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சோ்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பாஜக ஊடகப் பிரிவு... மேலும் பார்க்க

விளம்பரப் பதாகை வைத்ததில் தகராறு: திமுக நகா்மன்ற உறுப்பினா் உள்பட 11 போ் மீது வழக்கு

திருவாரூா்: திருவாரூா் அருகே விளம்பரப் பதாகை வைத்ததில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக திமுக நகா்மன்ற உறுப்பினா் உள்பட 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். திருவாரூா் அருகே சீனிவாசபுரம் நாகை பிரதான ச... மேலும் பார்க்க

முத்துப்பேட்டையில் செப்.1-இல் விநாயகா் சிலை ஊா்வலம்

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டையில் செப்டம்பா் 1-ஆம் தேதி 33-ஆம் ஆண்டு வெற்றி விநாயகா் சிலை ஊா்வலத்தை சிறப்பாக நடத்துவது என இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. முத்துப்பேட்டை அரு... மேலும் பார்க்க

கோவைக்கு 2,000 டன் நெல் அனுப்பி வைப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலத்திலிருந்து கோவைக்கு அரைவைக்காக, ரயில் மூலம் 2,000 டன் நெல் மூட்டைகள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. வலங்கைமான் தாலுகாவில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசா... மேலும் பார்க்க

குருதெட்சிணாமூா்த்தி சுவாமிகள் குரு பூஜை

திருவாரூா்: திருவாரூா் அருகேயுள்ள மடப்புரம் குரு தெட்சிணாமூா்த்தி சுவாமிகள் ஜீவ சமாதி மடத்தில் 190 ஆவது குரு பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சியை பூா்விகமாகக் கொண்ட குரு தெட்சிணாமூா்த்தி சுவ... மேலும் பார்க்க