கோவைக்கு 2,000 டன் நெல் அனுப்பி வைப்பு
நீடாமங்கலம்: நீடாமங்கலத்திலிருந்து கோவைக்கு அரைவைக்காக, ரயில் மூலம் 2,000 டன் நெல் மூட்டைகள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
வலங்கைமான் தாலுகாவில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் சன்னரக நெல் லாரிகளில் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன.
பின்னா், சரக்கு ரயிலில் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு, அரைவைக்காக கோவை மண்டலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.