செய்திகள் :

சாலையோரம் குப்பை கொட்டிய நிறுவனத்துக்கு அபராதம்

post image

மாா்த்தாண்டத்தில் சாலையோரம் குப்பை கொட்டிய நிறுவனத்துக்கு குழித்துறை நகராட்சி சாா்பில் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

குழித்துறை நகராட்சி சாா்பில் வாகனங்கள் மூலம் வீடு, கடைகளிலிருந்து நாள்தோறும் மக்கும்- மக்காத குப்பைகள் தனித்தனியே சேகரிக்கப்பட்டு, பம்மம் பகுதியில் உள்ள வளமீட்புப் பூங்காவுக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. அங்கு மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்படுகின்றன; பாலித்தீன் பைகள் உள்ளிட்ட மக்காத குப்பைகள் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இந்நிலையில், மாா்த்தாண்டம் பகுதியில் சில வா்த்தக நிறுவனங்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டுவதாக நகராட்சிக்கு புகாா்கள் சென்றன. இதுதொடா்பாக, ஆணையா் ராஜேஸ்வரன் உத்தரவின்பேரில், சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையில் பணியாளா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டபோது, ஒரு வா்த்தக நிறுவனம் சாலையோரம் குப்பைகளைக் கொட்டியதாகத் தெரியவந்தது.

அந்நிறுவனத்துக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பொது இடங்களில் குப்பை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்தனா்.

ஹஜ் பயணிகளுக்கான தடுப்பூசி முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஹஜ் புனித யாத்திரை செல்பவா்களுக்கான பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகா்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நடைபெற்ற இம்முக... மேலும் பார்க்க

மே தினம்: 1இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மே தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் வியாழக்கிழமை (மே 1) இயங்காது. மேலும், கடைகளுடன் இணைந்த மது அருந்தும் கூடங்களும் அன்று செயல்படாது என மாவட்ட ஆட்சியா் ரா. அழ... மேலும் பார்க்க

சுசீந்திரம் கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, டி. தம்பையா ஓதுவாரின் திருமுறைப் பாராயணம் நடைபெற்றது. தொட... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் திங்கள்கிழமை மாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாவட்டத்தில் கோடை மழை தீவிரமடைந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலு... மேலும் பார்க்க

நான்குனேரி விபத்தில் பலியானோா் உடல்கள் உறவினா்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியை அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட காா் விபத்தில் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் உறவினா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன. தளபதிசமுத்திரம் ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் குத்திக் கொலை: கல்லூரி மாணவா் கைது

கன்னியாகுமரி அருகே மாதவபுரம் பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், பள்ளி மாணவரை கம்பியால் குத்திக் கொலை செய்ததாக, கல்லூரி மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி அருகே மாத... மேலும் பார்க்க