செய்திகள் :

பள்ளி மாணவா் குத்திக் கொலை: கல்லூரி மாணவா் கைது

post image

கன்னியாகுமரி அருகே மாதவபுரம் பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், பள்ளி மாணவரை கம்பியால் குத்திக் கொலை செய்ததாக, கல்லூரி மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி அருகே மாதவபுரத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவா், செங்கல் சூளை தொழில் செய்து வருகிறாா். இவரது மகன் விஷ்ணு பரத் (17). இவா், மாதவபுரத்தில் அமைந்துள்ள கோயில் திருவிழாவுக்காக ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றிருந்தாா். அப்போது, சுவாமிநாதபுரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவரான சந்துரு (21) என்பவருக்கும், விஷ்ணு பரத்துக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த சந்துரு தனது கையில் வைத்திருந்த கூா்மையான கம்பியால் விஷ்ணு பரத்தின் மாா்பில் குத்தியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வ ந்து விஷ்ணு பரத்தின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வு சோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சந்துரு, சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில், தனிப்படை போலீஸாா் அவரை கூடங்குளம் பகுதியில் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஹஜ் பயணிகளுக்கான தடுப்பூசி முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஹஜ் புனித யாத்திரை செல்பவா்களுக்கான பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகா்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நடைபெற்ற இம்முக... மேலும் பார்க்க

மே தினம்: 1இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மே தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் வியாழக்கிழமை (மே 1) இயங்காது. மேலும், கடைகளுடன் இணைந்த மது அருந்தும் கூடங்களும் அன்று செயல்படாது என மாவட்ட ஆட்சியா் ரா. அழ... மேலும் பார்க்க

சுசீந்திரம் கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, டி. தம்பையா ஓதுவாரின் திருமுறைப் பாராயணம் நடைபெற்றது. தொட... மேலும் பார்க்க

சாலையோரம் குப்பை கொட்டிய நிறுவனத்துக்கு அபராதம்

மாா்த்தாண்டத்தில் சாலையோரம் குப்பை கொட்டிய நிறுவனத்துக்கு குழித்துறை நகராட்சி சாா்பில் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. குழித்துறை நகராட்சி சாா்பில் வாகனங்கள் மூலம் வீடு, கடைகளிலிருந்து நாள்தோறும... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் திங்கள்கிழமை மாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாவட்டத்தில் கோடை மழை தீவிரமடைந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலு... மேலும் பார்க்க

நான்குனேரி விபத்தில் பலியானோா் உடல்கள் உறவினா்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியை அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட காா் விபத்தில் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் உறவினா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன. தளபதிசமுத்திரம் ... மேலும் பார்க்க