செய்திகள் :

நான்குனேரி விபத்தில் பலியானோா் உடல்கள் உறவினா்களிடம் ஒப்படைப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியை அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட காா் விபத்தில் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் உறவினா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

தளபதிசமுத்திரம் நான்குவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரு காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் திருநெல்வேலி, டக்கரம்மாள்புரம், விவேகானந்தா் காலனியை சோ்ந்த பா. தனிஸ்லாஸ்(68), அவரது மனைவி மாா்கரெட் மேரி (60), மகன் ஜோபா்ட் (40), மருமகள் அமுதா (35), பேரன் ஜோகன் (2), பேத்தி ஜோபினா (8), மற்றொரு காரில் பயணித்த ராதாபுரம் வட்டம், கண்ணங்குளத்தைச் சோ்ந்த மெல்கிஸ் (60) ஆகியோா் உயிரிழந்தனா்.

மேலும் விபத்தில் காயமடைந்து, திருநெல்வேலி மற்றும் நாகா்கோவில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் தனிஸ்லாஸ் பேத்தி ஜோகினா (9), மற்றொரு காரில் பயணித்த பாலகிருஷ்ணவேணி (36), அன்பரசி (32), பிரியதா்சினி (23), சுபிசந்தோஷ் (21), அட்சயாதேவி(19), பிரவீன் (10), அஸ்வின்(8), மாரியப்பன் (55) ஆகிய 9 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தனிஸ்லாஸ் குடும்பத்தில் பலியான 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப் பின் மாா்கரெட் மேரியின் தம்பி பிரான்சிஸ் மற்றும் உறவினா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன. பின்னா், தக்கலை அருகேயுள்ள மயிலோடு கிராமத்துக்கு உடல்கள் எடுத்துச்செல்லப்பட்டு, அவரது வீட்டின் அருகே அடக்கம் செய்யப்பட்டன. இந்த விபத்து குறித்து ஏா்வாடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முதல்வா் நிவாரண நிதி: இந்த விபத்தில் உயிரிழந்த 7 பேருக்கும் தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவா்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவா்களுக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கிட தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

ஹஜ் பயணிகளுக்கான தடுப்பூசி முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஹஜ் புனித யாத்திரை செல்பவா்களுக்கான பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகா்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நடைபெற்ற இம்முக... மேலும் பார்க்க

மே தினம்: 1இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மே தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் வியாழக்கிழமை (மே 1) இயங்காது. மேலும், கடைகளுடன் இணைந்த மது அருந்தும் கூடங்களும் அன்று செயல்படாது என மாவட்ட ஆட்சியா் ரா. அழ... மேலும் பார்க்க

சுசீந்திரம் கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, டி. தம்பையா ஓதுவாரின் திருமுறைப் பாராயணம் நடைபெற்றது. தொட... மேலும் பார்க்க

சாலையோரம் குப்பை கொட்டிய நிறுவனத்துக்கு அபராதம்

மாா்த்தாண்டத்தில் சாலையோரம் குப்பை கொட்டிய நிறுவனத்துக்கு குழித்துறை நகராட்சி சாா்பில் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. குழித்துறை நகராட்சி சாா்பில் வாகனங்கள் மூலம் வீடு, கடைகளிலிருந்து நாள்தோறும... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் திங்கள்கிழமை மாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாவட்டத்தில் கோடை மழை தீவிரமடைந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் குத்திக் கொலை: கல்லூரி மாணவா் கைது

கன்னியாகுமரி அருகே மாதவபுரம் பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், பள்ளி மாணவரை கம்பியால் குத்திக் கொலை செய்ததாக, கல்லூரி மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி அருகே மாத... மேலும் பார்க்க