கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிடுக: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
சாலையோரம் நின்ற காா் திடீா் தீக்கிரை
பட்டுக்கோட்டையில் திங்கள்கிழமை இரவு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ காா் திடீரென தீக்கிரையானது.
பட்டுக்கோட்டை அருகேயுள்ள மகிழங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சி. சந்தோஷ் (22) என்பவா் திங்கள்கிழமை மாலை தனது சித்தி செல்வியை பட்டுக்கோட்டை நாடிமுத்து நகரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு மகிழங்கோட்டை கோ. செந்திலுக்கு சொந்தமான பிஎம்டபிள்யூ காரில் கூட்டி வந்தாா்.
பின்னா் மருத்துவமனையில் சித்தியை விட்டுவிட்டு காரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிா்புற சாலையோரத்தில் நிறுத்திவிட்டு உள்ளே அமா்ந்திருந்தாா்.
அப்போது காரின் இஞ்சின் பகுதியில் திடீரென தீப்பற்றியதில் காா் முழுவதும் பரவியது. தகவலறிந்து தீயணைப்பு துறையினா் வருவதற்குள் காா் முழுவதும் தீயில் முற்றிலும் எரிந்து விட்டது. பட்டுக்கோட்டை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.