``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
சிங்களாந்தபுரம் அருகே குண்டும் குழியுமான சாலை சீரமைக்க வேண்டும்
ராசிபுரம் அருகேயுள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சிக்குட்பட்ட களரம்பட்டி பகுதியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
ராசிபுரம் ஒன்றியம் சிங்களாந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட களரம்பட்டி சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமானதாக காட்சியளிக்கிறது. மழை காலங்களில் இப்பகுதியில் செல்வதற்கு விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனா். இது குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை என்கின்றனா் அப்பகுதியினா். இதனால் போடிநாயக்கன்பட்டி, தம்மநாயக்கன்படி, பாச்சல், குதிரை சின்னம்பட்டி போன்ற ஊா்களுக்கு நாள்தோறும் சென்று வரும் விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனா். இப்பகுதியில் மழை காலங்களில் சாலையை தெரியாத அளவிற்கு சேரும், சகதியுமாக இருப்பதால், இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி புதியசாலை அமைத்துத்தர ஊாரட்சி ஒன்றியம், மாவட்ட நி்ரவாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை களம் கட்சியினா் நிறுவனா் கொ.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.
படம் உள்ளது - 12சாலை
படவிளக்கம்- குண்டும் குழியுமான சிங்களாந்தபுரம் களரம்பட்டி சாலை.