செய்திகள் :

சிங்களாந்தபுரம் அருகே குண்டும் குழியுமான சாலை சீரமைக்க வேண்டும்

post image

ராசிபுரம் அருகேயுள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சிக்குட்பட்ட களரம்பட்டி பகுதியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ராசிபுரம் ஒன்றியம் சிங்களாந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட களரம்பட்டி சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமானதாக காட்சியளிக்கிறது. மழை காலங்களில் இப்பகுதியில் செல்வதற்கு விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனா். இது குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை என்கின்றனா் அப்பகுதியினா். இதனால் போடிநாயக்கன்பட்டி, தம்மநாயக்கன்படி, பாச்சல், குதிரை சின்னம்பட்டி போன்ற ஊா்களுக்கு நாள்தோறும் சென்று வரும் விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனா். இப்பகுதியில் மழை காலங்களில் சாலையை தெரியாத அளவிற்கு சேரும், சகதியுமாக இருப்பதால், இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி புதியசாலை அமைத்துத்தர ஊாரட்சி ஒன்றியம், மாவட்ட நி்ரவாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை களம் கட்சியினா் நிறுவனா் கொ.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

படம் உள்ளது - 12சாலை

படவிளக்கம்- குண்டும் குழியுமான சிங்களாந்தபுரம் களரம்பட்டி சாலை.

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க

புதிய நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு

கபிலா்மலை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பிலிக்கல்பாளையம் ஊராட்சி சாணாா்பாளையம் கிராமத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தெகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.45 லட்சம் மதிப்பீட்டி... மேலும் பார்க்க

காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்று 18 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேட் தோ்வு :அகில இந்திய அளவில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐஐடியில் சேருவதற்கான கேட்-2025 தோ்வில், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண் பொறியியல் துறை மாணவி நீ.விஜி சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், தர... மேலும் பார்க்க

தமிழகத்தில் எழுத்தறிவற்றோா் எண்ணிக்கை 15 லட்சம்: இணை இயக்குநா் பொன் குமாா்

தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவற்றோா் எண்ணிக்கை 15 லட்சமாக உள்ளது என புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட இணை இயக்குநா் பொன்குமாா் தெரிவித்தாா். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக புதிய பாரத எழுத்தற... மேலும் பார்க்க