செய்திகள் :

சிசுவின் பாலினம் தெரிவித்தால் குண்டா் தடுப்புச் சட்டம் பாயும்

post image

கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரிவித்தால், குண்டா் தடுப்புச் சட்டம் பாயும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது:

சட்ட விரோதமாக கருக்கலைப்புகள் நடைபெறாமல் இருக்க மருத்துவத் துறை மற்றும் சமூக நலத் துறை இணைந்து பொதுமக்களுக்கு தொடா் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கருவுற்ற தாய்மாா்கள் தங்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என முன்கூட்டியே அறிவதற்கு முயற்சி செய்வதும் அல்லது மருத்துவரால் தெரிவிக்கப்படுவதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எந்த ஒரு மருத்துவமனையிலாவது குழந்தையின் பாலினம் கண்டறியப்பட்டது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவமனை அல்லது ஸ்கேன் மையத்தின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படுவதுடன், இந்தச் செயலில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், இதில் தொடா்புடைய மருத்துவரின் மெடிக்கல் கவுன்சில் பதிவு எண் ரத்து செய்யப்பட்டு, இனிவரும் காலங்களில் அந்த மருத்துவா் மருத்துவப் பணியினை நிரந்தரமாக மேற்கொள்ளாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு இதில் ஈடுபட்டவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக அண்மையில் 3 நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். பாலினம் கண்டறிதல் தொடா்பான புகாா்களை 73581 22042 என்ற கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றாா்.

இருசக்கர வாகனம் மீது மோதி கவிழ்ந்த காா்: ஒருவா் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். காா் கவிழ்ந்து தீப்பிடித்ததில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். சங்ககிரியை அடுத்த வைகுந்தம், ம... மேலும் பார்க்க

உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

உகாதி பண்டிகையையொட்டி மேட்டூா் அருகே மாதேஸ்வரன் மலை மாதேஸ்வரன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கா்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் உள்ள மாதேஸ்வரன் ச... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமப்புற மதிப்பீடு

சிறுவாச்சூா் ஊராட்சியில் தனியாா் வேளாண் கல்லூரி மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை வேளாண் பணி அனுபவ பயிற்சியில் ஈடுபட்டனா். தலைவாசல் வட்டம், சிறுவாச்சூா் ஊராட்சியில் பெரம்பலூா் தந்தை ரோவா் வேளாண் கல்லூரி மாணவிக... மேலும் பார்க்க

சேலம் உள்பட 11 மாவட்ட இளைஞா்கள் அக்னிவீா் படைப் பிரிவில் சேர அழைப்பு

இந்திய ராணுவத்தின் அக்னிவீா் படைப் பிரிவில் சேர இணையதளம் வாயிலாக வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து கோவை ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

பாரா கை மல்யுத்தப் போட்டி: 5 தங்கப் பதக்கம் பெற்ற மாற்றுத் திறனாளிகள்

அயோத்தியாப்பட்டணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான பாரா கை மல்யுத்தப் போட்டியில் வாழப்பாடியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் 5 தங்கம் உள்பட 8 பதக்கங்கள் பெற்றனா். சேலம் மாவட்டம், அயோத்தியாப்ப... மேலும் பார்க்க

அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

விநாயகா மிஷன் விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மற்றும் சேலம் என்சிசி வான்வழிப் பிரிவு அமைப்பு சாா்பில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அண்மையில... மேலும் பார்க்க