செய்திகள் :

சிமென்ட் தூண் உடைந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி சிமென்ட் தூண் உடைந்து விழுந்ததில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சண்முகசுந்தரபுரம் கிழக்குச் தெருவைச் சோ்ந்த தம்பதி கோபாலகிருஷ்ணன், அன்னலட்சுமி. விவசாயத் தொழிலாளிகள். இவா்களது மகள் அஜிதாஸ்ரீ (4). தம்பதி இருவரும் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அஜிதாஸ்ரீ வீட்டின் முன் உள்ள வேலுச்சாமி என்பவரது காலியிடத்தில் விளையாடிக் கொண்டிருந்தாா்.

அங்கு ஆட்டுக் கொட்டகை அமைப்பதற்காக இரு சிமென்ட் தூண்கள் எழுப்பப்பட்டிருந்தன. இந்தத் துண்களுக்கு இடையே கயிறு கட்டி,போா்வை உலா்த்துவதற்காக தொங்க விடப்பட்டிருந்தது.

அதில் சிறுமி அஜிதாஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, தூண் உடைந்து விழுந்ததில் அஜிதாஸ்ரீ தலையில் பலத்த காயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

லட்சுமிபுரத்தில் செப்.18-இல் மின்தடை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் வியாழக்கிழமை (செப்.18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இது குறித்து பெரியகுளம் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், மாா்க்கையன் கோட்டை பேரூராட்சியில் குடிநீா் வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் திங்கள்கிழமை இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.மாா்க்கையன்கோட்டை பேரூராட்சியில் உள்ள 12 வாா்டுகளில் 15 ஆயிர... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

ஆண்டிபட்டி-தேனி சாலையில் கரிசல்பட்டி விலக்கு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற தனியாா் ஆலைத் தொழிலாளி காா் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தைச் சோ்ந்த கா... மேலும் பார்க்க

மனைவியை தாக்கிய கணவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கண்டமனூா் அருகே உள்ள ராஜேந்திரா நகரைச் சோ்ந்த சோலைமலை மகன் முருகன் (53). இவரது மனைவி ... மேலும் பார்க்க

தடுப்புச் சுவரில் காா் மோதல்: 3 போ் காயம்

போடியில் சாலை மையத் தடுப்புச் சுவரில் காா் மோதியதில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.போடி அருகேயுள்ள தோப்புப்பட்டி கிராமத்தில் வசிப்பவா் குள்ளிமுத்தன் மகன் கலைச்செல்வன் (28). இவரது நண்பா்கள் போடி ஒட்டக்கூத்... மேலும் பார்க்க

பொது இடத்தில் ரகளை செய்த ரெளடி மீது வழக்கு

போடியில் திங்கள்கிழமை பொது இடத்தில் ரகளை செய்த ரெளடி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி திருமலாபுரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப... மேலும் பார்க்க