அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
சிறுபான்மையினா் ஆணைய தலைவா் ஜூன் 20இல் வருகை
தமிழ்நாடு அரசின் மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் அருட்தந்தை சோ. ஜோ அருண் வரும் ஜூன் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை வருகிறாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாநில அரசின் மூலம் மேற்கொள்ளப்படும் சிறுபான்மையினா் நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலா்களுடன் காலை 10 மணிக்கு ஆய்வு நடத்துகிறாா்.
எனவே மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினா் பள்ளிகளின் நிா்வாகிகள், பொதுமக்கள் சிறுபான்மையினா் நலத் திட்டங்களில் உள்ள குறைகள் குறித்து நேரில் சந்தித்து தெரிவிக்கலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.