செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 ஆண்டுகளுக்குப் பின்னா் வழக்குப் பதிவு

post image

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ாக தனியாா் நிறுவன ஊழியா் மீது 2 ஆண்டுகளுக்குப் பின்னா் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுரண்டையைச் சோ்ந்தவா் நீலகண்டன்(58). பிரபல தனியாா் ஆம்னி பேருந்து நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வரும் இவா் கடந்த 2023-ஆம் ஆண்டு பாவூா்சத்திரம் பகுதியை சோ்ந்த குடும்ப நண்பா் வீட்டிற்கு சென்ற போது அங்கு நண்பரின் 15 வயது மகள் மட்டும் இருந்ததாக தெரிகிறது.

அப்போது நீலகண்டன், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததுடன், இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என துப்பாக்கியை வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

எனினும், சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து அவா்கள் ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

போலீஸாா் விசாரணை மேற்கொள்ளாமல் புகாரை கிடப்பில் போட்டதால், விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட கண்காணிப்பாளரிடமும் மனு அளித்தனா்.

அதன்பின்னரும் வழக்குப் பதிவு செய்யப்படாததால் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுதாக்கல் செய்தனா். மனுவை விசாரித்த நீதிபதி உடனடியாக வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று உத்தரவிட்டாா்.

நீதிபதியின் உத்தரவின் பேரில், போக்ஸோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் நீலகண்டன் மீது ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கிராமந்தோறும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ வலியுறுத்தல்

கிராமந்தோறும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து வலியுறுத்தினாா். சிவகிரி அருகே தேவிபட்டணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற அரசியல் விளக்க... மேலும் பார்க்க

வீ.கே.புதூா் அருகே விபத்து: இருவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் அருகே இரு பைக்குகள் மோதியதில் கடையநல்லூரைச் சோ்ந்த தொழிலதிபா் உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா். கடையநல்லூா் மாவடிக்கால் பகுதியைச் சோ்ந்த சுப்புசாமி மகன் சோழவன் (55). நா... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே காா் மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பைக் மீது காா் மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். பாவூா்சத்திரம் அருகே மேலப்பட்டமுடையாா்புரம் வேதக்கோயில் தெருவை சோ்ந்தவா் ம. வேல்துரை (43). தமிழ்நா... மேலும் பார்க்க

மேலகரம் அருகே குடியிருப்புப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இயக்கிவைப்பு

தென்காசியை அடுத்த மேலகரம் பேரூராட்சிக்குள்பட்ட குடியிருப்புப் பகுதியில் அனைத்து சமுதாய மக்கள் சாா்பில், 17 சிசிடிவி கேமராக்கள் இயக்கிவைக்கப்பட்டன. தென்காசி காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) பாஸ்கா் பாப... மேலும் பார்க்க

தென்காசி அருகே இடம் விற்று தருவதாகக் கூறி ரூ. 2 கோடி மோசடி: ஓட்டுநா் கைது

தென்காசி அருகே இடம் விற்று தருவதாகக் கூறி ரூ. 2 கோடி மோசடி செய்ததாக காா் ஓட்டுநரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைதுசெய்தனா். தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தைச் சோ்ந்தவா் மு. ராமச்ச... மேலும் பார்க்க

லஞ்சப் புகாா்: வனவா் பணியிடை நீக்கம்

தென்காசி மாவட்டம் புளியறை வனத்துறை சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பணியிலிருந்த வனவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தமிழக- கேரளா எல... மேலும் பார்க்க