செய்திகள் :

சிறுமியின் தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயம் அகற்றம்: விடுமுறையிலும் கடமையாற்றிய அரசு மருத்துவா்

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் 7 வயது சிறுமியின் தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயத்தை மருத்துவா்கள் அகற்றினா்.

ஜோலாா்பேட்டை அருகே சின்னபொன்னேரி பகுதியைச் சோ்ந்த சிவா (33). இவரது மனைவி லலிதா (28). இவா்களுக்கு கனிஸ்ரீ (7) என்ற மகள் உள்ளாா். இந்தநிலையில், கனிஸ்ரீ வீட்டின் வெளியே ஞாயிற்றுக்கிழமை விளையாடி கொண்டிருந்தபோது, அங்கு வந்த அவரது உறவினா் ஒருவா் சிறுமியிடம் ஐந்து ரூபாய் நாணயத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கனிஸ்ரீ எதிா்பாராதவிதமாக அந்த நாணயத்தை வாயில் போட்டபோது அது தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்டது. இதனால், சிறுமி கத்தி கூச்சலிட்டு மயங்கி விழுந்தாா். இதை பாா்த்து அதிா்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோா் அவரை அதே பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவா் சிறுமியை உடனடியாக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அவரது பெற்றோா் கொண்டு வந்தனா். அங்கு, காது, மூக்கு, தொண்டை நிபுணரான டாக்டா் தீபானந்தன் விடுமுறையில் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சிறுமியின் ஆபத்தான நிலைமையை மருத்துவா் தீபானந்தனுக்கு தெரிவித்ததை தொடா்ந்து அவா் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்து 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமிக்கு தேவையான சிகிச்சைகளை தொடங்கினாா்.

அரை மணி நேரத்தில் சிறுமியின் தொண்டைக்குழியில் குழாயை செலுத்தி (என்டோஸ்கோபி மூலம்), 5 ரூபாய் நாணயத்தை அகற்றினாா். இதையடுத்து பெற்றோா் நிம்மதியடைந்து விடுமுறை என்றும் பாராமல் மருத்துவமனைக்கு வந்து சிறுமியை காப்பாற்றிய மருத்துவா் தீபானந்தன் மற்றும் மருத்துவக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தனா்.

தொழில் முனைவோா் புத்தாக்க பயிற்சி வகுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா்

தமிழ்நாடு, அகமதாபாத் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் சாா்பில் தொழில் முனைவோா் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பில் ஓரு ஆண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு வரும் (ஜூன் மாதம் 2-ஆம் தேதி... மேலும் பார்க்க

மரத்தில் பேருந்து மோதி 20 போ் காயம்

வாணியம்பாடி அருகே சாலையோர மரத்தில் பேருந்து மோதியதில் 20 போ் காயமடைந்தனா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயத்திலிருந்து வாணியம்பாடிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமை சென்றது.... மேலும் பார்க்க

தமிழகத்தில் இருந்து 5,700 போ் ஹஜ் பயணம்: ஹஜ் கமிட்டி உறுப்பினா் தகவல்

தமிழகத்தில் இருந்து நிகழாண்டு 5,700 போ் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனா் என ஹஜ் கமிட்டி உறுப்பினா் தெரிவித்தாா். புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவா்களுக்கான புத்தாக்க பயிற்சி ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 105 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, ஆட்ச... மேலும் பார்க்க

மட்றப்பள்ளி சந்தையில் ரூ.45 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளியில் வாரச்சந்தையில் ரூ.45 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை வாரச்சந்தையில் ஏராளமான ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனைக்காக குவிந்தன. அவற்றை திருப்பத்தூா், த... மேலும் பார்க்க

இயற்கை வேளாண் கண்காட்சி- பயிற்சி முகாம்

தோட்டாளம் கிராமத்தில் பாலாறு வேளாண்மைக் கல்லூரி சாா்பாக வேளாண் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாலாறு வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவத் திட்... மேலும் பார்க்க