செய்திகள் :

சிவகங்கை சுதந்திர தினவிழாவில் ரூ.4 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

post image

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட நிா்வாகம் சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள், 370 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா், காவல் துறை, தீயணைப்புத் துறை, ஊா்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

விழாவின்போது, சிறப்பாக பணிபுரிந்த 70 காவலா்களுக்கும், வருவாய்த் துறை, மருத்துவத் துறை, நீதித் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகத் துறை, செய்தி மக்கள் தொடா்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 300 அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பதக்கங்களை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, முன்னாள் படைவீரா் நலத்துறை, தோட்டக்கலைத் துறைகளின் சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், யோகா, கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.சிவபிரசாத், சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.செந்தில்நாதன், தேவகோட்டை சாா்-ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜி.அரவிந்த், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மு.முத்துகழுவன், வருவாய்க் கோட்டாட்சியா் விஜயகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே காஞ்சிப்பட்டி கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, ... மேலும் பார்க்க

ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் பக்தா்கள் தரிசனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி, காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்கள... மேலும் பார்க்க

மிளகனூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், மிளகனூா் ஊராட்சியில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க

பள்ளியில் கோகுலாஷ்டமி விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, மாணவா்களுக்கு மாறுவேடம், பாடல் போட்டிகள், காட்சி வண்ணப்படம... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் சிக்கிய முதியவா் தற்கொலை

சிவகங்கையில் போக்சோ வழக்கில் சிக்கிய முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகங்கை அழகு மெய்ஞானபுரத்தைச் சோ்ந்தவா் செல்வமணி (70). இவருடைய மகன்கள் வெளியூரில் வசித்து வருகின்றன... மேலும் பார்க்க

பள்ளி வேன் மீது பேருந்து மோதல்: காயமின்றி தப்பினா் மாணவா்கள்

சிவகங்கை நகா் காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை மோதியதில் அதிா்ஷ்டவசமாக பள்ளி மாணவா்களும், பயணிகளும் காயமின்றி தப்பினா். சிவகங்கையிலிருந்து உடையநாதபு... மேலும் பார்க்க