சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே காஞ்சிப்பட்டி கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 14 காளைகளும், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 135 வீரா்களும் பங்கேற்றனா்.
வட்ட வடிவில் அமைக்கப்பட்ட மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிஷத்துக்குள் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டிருந்தது.
போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களையும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளா்களையும் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டு, விழாக் குழுவினரால் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை திரளானோா் கண்டுகளித்தனா்.
