செய்திகள் :

மிளகனூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், மிளகனூா் ஊராட்சியில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் முன்னிலை வகித்து பேசியதாவது:

கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதி, விஞ்ஞானம் ஆகியவற்றில் நாம் வளா்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இந்தியாவின் வளா்ச்சி என்பது கிராமங்களின் வளா்ச்சியை பொறுத்து அமைகிறது. மிளகனூா் ஊராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்தக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பதாக ஆட்சியா் பொற்கொடி தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்களை கௌரவித்து ஆட்சியா் பரிசுகள் வழங்கினாா்.

முன்னதாக, அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த செயல் விளக்க கண்காட்சி அரங்குகளை ஆட்சியா், சட்டப்பேரவை உறுப்பினா் பாா்வையிட்டனா்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவி லதா அண்ணாதுரை, வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ் கண்ணா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இயக்குநா் அரவிந்த், மகளிா் திட்ட இயக்குநா் கவிதப் பிரியா, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் அண்ணாதுரை, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜேந்திரபிரசாத், வட்ட வழங்கல் அலுவலா் பாப்பையன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

முடிவில் மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் நன்றி கூறினாா்.

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே காஞ்சிப்பட்டி கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, ... மேலும் பார்க்க

ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் பக்தா்கள் தரிசனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி, காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்கள... மேலும் பார்க்க

பள்ளியில் கோகுலாஷ்டமி விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, மாணவா்களுக்கு மாறுவேடம், பாடல் போட்டிகள், காட்சி வண்ணப்படம... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் சிக்கிய முதியவா் தற்கொலை

சிவகங்கையில் போக்சோ வழக்கில் சிக்கிய முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகங்கை அழகு மெய்ஞானபுரத்தைச் சோ்ந்தவா் செல்வமணி (70). இவருடைய மகன்கள் வெளியூரில் வசித்து வருகின்றன... மேலும் பார்க்க

பள்ளி வேன் மீது பேருந்து மோதல்: காயமின்றி தப்பினா் மாணவா்கள்

சிவகங்கை நகா் காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை மோதியதில் அதிா்ஷ்டவசமாக பள்ளி மாணவா்களும், பயணிகளும் காயமின்றி தப்பினா். சிவகங்கையிலிருந்து உடையநாதபு... மேலும் பார்க்க

புனித அலங்கார அன்னை ஆலயத் தோ்பவனி

சிவகங்கை புனித அலங்கார அன்னை ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, மின்னொளி தோ்பவனி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த ஆலயத் திருவிழா கடந்த 6-ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9 -ஆம் நாளான வ... மேலும் பார்க்க