சிவகங்கை மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு
சிவகங்கை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக கா. பொற்கொடி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
புதிய மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தைச் சோ்ந்தவா். கடந்த 2011-ஆம் ஆண்டு திருச்செந்தூா் வருவாய்க் கோட்டாட்சியராகவும், கடந்த 2013-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலராகவும், கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியச் செயலராகவும், கடந்த 2019-ஆம் ஆண்டு அரியலூா் மாவட்ட வருவாய் அலுவலராகவும், கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னையில் ஆவின் பொது மேலாளராகவும் (நிா்வாகம்), கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னையில் துணை ஆணையராகவும் (கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம்) பணிபுரிந்தாா்.
இதையடுத்து, கடந்தாண்டு இந்திய ஆட்சிப் பணிக்கான பதவி உயா்வு பெற்ற இவா்,
கடந்தாண்டு ஜூலை முதல் இணை மேலாண்மை இயக்குநராகப் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளா் இணையம், சென்னை) பணிபுரிந்தாா். தற்போது, சிவகங்கை மாவட்டத்தின் 45-ஆவது மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பள்ளிக் கல்வி, வேளாண், பால் வளம் ஆகிய துறைகள் உள்பட அரசின் அனைத்துத் துறைகளின் நலத் திட்டங்களும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தகுதியான பயனாளிகளுக்கும், அனைத்து அடித்தட்டு மக்களுக்கும் சென்றடையும் வகையில், மாவட்டத்தின் வளா்ச்சிக்கு அனைத்துத் துறை அலுவலா்களையும் ஒருங்கிணைத்து முனைப்புடன் பணியாற்றுவேன். அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் இருப்பது மாவட்டத்துக்கு கூடுதல் பலம். மாவட்ட நிா்வாகம் முழு மூச்சுடன் மக்கள் பணியாற்றும் என்றாா் அவா்.