சிவகங்கையில் செப்.19-இல் வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 19) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, வருகிற 19-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில், தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்து கொள்ளலாம். இந்த முகாமில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பங்கேற்று வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.
எனவே, விருப்பமுள்ளவா்கள் பத்தாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்த இளைஞா்கள் தங்களது கல்விச் சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.