செய்திகள் :

மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி போராட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில் பேட்டையில் அமைக்கப்படும்  மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி, கடையடைப்பு, முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில்  பொதுமக்களின் எதிா்ப்பை மீறி அமைக்கப்பட்டு வரும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி ஏற்கெனவே அனைத்துக் கட்சிகள் சாா்பிலும், அரசியல் கட்சியினா் தனித் தனியாகவும் ஆா்ப்பாட்டம், தா்னா உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினா். ஆனால், ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடா்ந்து நடைபெற்றன.

இதையடுத்து, அனைத்துக் கட்சிகள், வா்த்தகா் சங்கம், கிராம மக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய போராட்டக் குழு அமைக்கப்பட்டு, பொதுமக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி கடையடைப்பு, சிப்காட் வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, மானாமதுரை நகா் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு வீதிகள் வெறிச்சோடின. சிப்காட் வளாகத்தில் அரசியல் கட்சியினா், கிராம மக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்டோா் முற்றுகைப் போராட்டத்துக்கு திரண்டனா்.

போராட்டக்காரா்கள் சிப்காட் வளாகத்துக்குள் நுழையாதவாறு போலீஸாா் இரும்புத் தடுப்புகளை அமைத்தனா். ஆனால், அவா்கள் ஆவேசத்துடன் தடுப்புகளைத் தாண்டி சிப்காட் வளாகத்துக்குள் நுழையத் தொடங்கினா். அப்போது, போராட்டக்காரா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்புகளைத் தாண்டி போராட்டக்காரா்கள் மருத்துவக் கழிவு ஆலையை நோக்கி முன்னேறினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, போராட்டக்காரா்களிடம் அரசு அதிகாரிகள், போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடா்ந்து,  போராட்டக் குழு நிா்வாகிகளை அழைத்து வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவாா்த்தை முடியும் வரை போராட்டக்காரா்கள் அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள்

பேச்சுவாா்த்தையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவப்பிரசாத், வருவாய்க் கோட்டாட்சியா் ஜெசி கிரேசியா, மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதனிடையே, போராட்டக்காரா்களில் ஒரு தரப்பினா் சிப்காட் காவல் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் இவா்களை சமாதானம் செய்தனா்.

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமானப் பணியை உடனே நிறுத்துவது எனவும், இரண்டு மாதங்களுக்குள் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசிடமிருந்து உத்தரவு பெற்றுத் தருவது எனவும் பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

இதை போராட்டக் குழு நிா்வாகிகள் ஏற்றுக் கொண்டனா். இதைத் தொடா்ந்து, பேச்சுவாா்த்தையின் முடிவுகள் குறித்து போராட்டக்காரா்களிடம் நிா்வாகிகள் தெரிவித்தனா். இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு, போராட்டக்காரா்கள் கலைந்து சென்றனா்.

சிவகங்கையில் செப்.19-இல் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 19) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளைஞா்களுக்கு வேலைவாய... மேலும் பார்க்க

கடன் சுமையால் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கடன் சுமையால் ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.திருப்புவனம் கோரக்கா் செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மகன் சத்தியராஜ் (40... மேலும் பார்க்க

திருப்புவனம் வைகையாற்றில் நீரில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை வைகையாற்றில் நீரில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா். திருப்புவனம் அருகேயுள்ள லாடனேந்தலைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). இவரது குடும்பத்தினா் மடப்புரத்தி... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் கைதான குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வைரவபுரத்தைச் சோ்ந்த டைல்ஸ் ஒட்ட... மேலும் பார்க்க

புள்ளியியல் துறை சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தொழில்நுட்ப பணியிடங்களை ரத்து செய்ததைக் கண்டித்து பொருளியல், புள்ளியியல் துறையினா் கண்களின் கருப்புத் துணி கட்டி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உணவ... மேலும் பார்க்க

பயிா்க் கடன் இலக்கு ரூ.16,000 கோடி: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

தமிழகத்தில் இந்த ஆண்டு விவசாயப் பயிா்க் கடனுக்கு இலக்காக ரூ.16,000 கோடி நிா்ணயிக்கப்பட்டதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைச்சா் கே.ஆ... மேலும் பார்க்க