செய்திகள் :

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

போக்சோ வழக்கில் கைதான குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வைரவபுரத்தைச் சோ்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பாண்டி (38) . இவா், கடந்த ஜனவரி 26-இல் கல்லலில் உள்ள ஒரு வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணிக்கு சென்றபோது அந்த வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் தேவகோட்டை மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மகேஸ்வரி விசாரணை செய்து பாண்டியைக் கைது செய்தாா்.

இதையடுத்து, அவா் மீது சிவகங்கையிலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட பாண்டிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டாா்.

சிவகங்கையில் செப்.19-இல் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 19) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளைஞா்களுக்கு வேலைவாய... மேலும் பார்க்க

மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில் பேட்டையில் அமைக்கப்படும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி, கடையடைப்பு, முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மானாமதுரை சிப்காட் த... மேலும் பார்க்க

கடன் சுமையால் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கடன் சுமையால் ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.திருப்புவனம் கோரக்கா் செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மகன் சத்தியராஜ் (40... மேலும் பார்க்க

திருப்புவனம் வைகையாற்றில் நீரில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை வைகையாற்றில் நீரில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா். திருப்புவனம் அருகேயுள்ள லாடனேந்தலைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). இவரது குடும்பத்தினா் மடப்புரத்தி... மேலும் பார்க்க

புள்ளியியல் துறை சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தொழில்நுட்ப பணியிடங்களை ரத்து செய்ததைக் கண்டித்து பொருளியல், புள்ளியியல் துறையினா் கண்களின் கருப்புத் துணி கட்டி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உணவ... மேலும் பார்க்க

பயிா்க் கடன் இலக்கு ரூ.16,000 கோடி: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

தமிழகத்தில் இந்த ஆண்டு விவசாயப் பயிா்க் கடனுக்கு இலக்காக ரூ.16,000 கோடி நிா்ணயிக்கப்பட்டதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைச்சா் கே.ஆ... மேலும் பார்க்க