செய்திகள் :

சீனாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

post image

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின் பிங்கை பாராட்டிப் பேசினார்.

பிரதமர் மோடி பேசுகையில்,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை வெற்றிகரமாக நடத்தும் சீன அதிபர் ஜின் பிங்குக்கு பாராட்டுகள்.

பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நமது உறவுகளை மேம்படுத்தி, முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ளோம். 280 கோடி மக்களின் நலன், நமது இருதரப்பு ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

எல்லையில் படைகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, அமைதியான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லையில் மேலாண்மை குறித்து நமது பிரதிநிதிகளுக்கு இடையே சிறப்பான ஒப்புதல் இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானங்களும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக சீனாவுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் கலந்து கொள்வதால், அமெரிக்காவுக்கு எதிராக வியூகம் அமைக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க:மணிப்பூர் செல்கிறாரா பிரதமர் மோடி?

PM Modi shared his remarks from the bilateral meeting with Chinese President Xi Jinping

ஜம்முவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா

ஜம்முவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்போது பிக்ரம் சவுக் அருகே உள்ள தாவி பாலத்தில் நின்று ஆற்றங்கரையோரங்க... மேலும் பார்க்க

மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் மேலும் இருவர் பலி!

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(... மேலும் பார்க்க

தோளோடு தோள் நிற்கும் இந்தியா - ரஷியா! புதினுடனான சந்திப்பில் மோடி பேச்சு!

மிகவும் கடினமான சூழலிலும் இந்தியாவும் ரஷியாவும் தோளோடு தோள் நின்று உதவியுள்ளதாக ரஷிய அதிபருடனான இருதரப்பு சந்திப்பில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு... மேலும் பார்க்க

அடுத்த 24 - 48 மணி நேரங்கள் அபாயகரமானவை: வானிலை ஆய்வு மையம்

ஏற்கனவே மழை, வெள்ளத்தால் திணறி வரும் வட இந்திய மாநிலங்களுக்கு அடுத்த 24 - 48 மணி நேரங்கள் அபாயகரமானவை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் மனு: செப்.3ல் அலாகாபாத் உயர்நீதிமன்றம் விசாரணை!

வாரணாசி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தாக்கல் செய்த மனு மீதான அடுத்த விசாரணை செப்டம்பர் 3-ஆம் தேதி அலாகாபாத் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை நிர்ணயித்தது. ... மேலும் பார்க்க

கேதார்நாத் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: இருவர் பலி!

கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சோன்பிரயாக் மற்றும் கௌரிகுண்ட் இடையே முன்கட்டியா அருகே இன்று காலை கால... மேலும் பார்க்க