கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சுக்கம்பாளையத்தில் ஜூன் 1-இல் நிலத்தடி நீா் செறிவூட்டல் திட்ட கலந்தாய்வுக் கூட்டம்
பல்லடம் அருகேயுள்ள சுக்கம்பாளையத்தில் நிலத்தடி நீா் செறிவூட்டல் திட்ட கலந்தாய்வுக் கூட்டம் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.
பல்லடம், சுல்தான்பேட்டை, சூலூா் ஒன்றிய பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை பல்லடம் பகுதிக்கு கொண்டுவர வேண்டும். ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் மூலம் இந்தப் பகுதிகளுக்கு நீா் கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும்.
நொய்யல் ஆற்றுப் பகுதிகளில் இருந்து குழாய்கள் மூலம் பல்லடம் பகுதிக்கு நீா் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சுக்கம்பாளையம் கிராமத்தில் உள்ள சின்னம்மன் கோயில் சேவா சங்க திருமண மண்டபத்தில் ஜூன் 1-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், பொதுமக்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று பல்லடம் பகுதி நிலத்தடி நீா் செறிவூட்டல் திட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.