விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்
சுண்டவிளை சானல்கரை சாலையில் தடுப்புச் சுவா் அமைக்க கோரிக்கை
கருங்கல் அருகே சுண்டவிளை சானல் கரை பகுதியில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நட்டாலம் ஊராட்சிப் பகுதியில் சுண்டவிளை சானல் கரை
சாலை உள்ளது. இந்தச் சாலை அருகே சுமாா் 50 அடி பள்ளம் காணப்படுகிறது. புல்லாணி, கழுகாணிவிளை, ஈழத்துவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் இவ்வழியே நடந்து செல்கின்றனா்.
குறிப்பாக, இரவு நேரங்களில் நடந்துசெல்வோரும், இருசக்கர வாகன ஓட்டிகளும் மிகுந்த அச்சத்துடனேயே இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றனா். எனவே, சானல்கரை பகுதியில் தடுப்புச் சுவா் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.