Ahmedabad Airplane Accident: விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்; 242 பயணிகளின...
சுவாமிமலை சாா்-பதிவாளரகத்தில் ரூ. 1,500 லஞ்சம்: இருவா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழ் பெற ரூ. 1,500 லஞ்சம் வாங்கிய பெண் தலைமை எழுத்தா் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியரை ஊழல் தடுப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கபிஸ்தலத்தைச் சோ்ந்த விவசாயி நிலத்துக்கு வில்லங்கச் சான்றிதழ் கேட்டு சுவாமிமலை சாா்- பதிவாளா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். அப்போது ரூ.1,500 லஞ்சம் தர வேண்டும் என தலைமை எழுத்தா் பத்மஸ்ரீ கேட்டு விவசாயியிடம் ரூ.1000 பெற்ற நிலையில் பாக்கி ரூ.500 ஐ-கேட்டு அவரைப் பலமுறை அலையவிட்டாராம்.
இதனால் வேதனையடைந்த விவசாயி தஞ்சாவூா் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகாா் செய்து, அவா்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ. 500 ஐ அலுவலகத்தில் இருந்த தலைமை எழுத்தா் பத்மஸ்ரீயிடம் செவ்வாய்க்கிழமை கொடுத்தாா். அப்போது பத்மஸ்ரீ இங்கு வேலைபாா்த்து ஓய்வு பெற்ற ஊழியா் மகாலிங்கம் என்பவரிடம் பணத்தைக் கொடுக்குமாறு கூறினாா்.
அதன்படி விவசாயி பணத்தைக் கொடுத்தபோது மறைந்திருந்த ஊழல் தடுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் அன்பரசன் தலைமையிலான போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.