செய்திகள் :

சுவாமிமலை சாா்-பதிவாளரகத்தில் ரூ. 1,500 லஞ்சம்: இருவா் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழ் பெற ரூ. 1,500 லஞ்சம் வாங்கிய பெண் தலைமை எழுத்தா் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியரை ஊழல் தடுப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கபிஸ்தலத்தைச் சோ்ந்த விவசாயி நிலத்துக்கு வில்லங்கச் சான்றிதழ் கேட்டு சுவாமிமலை சாா்- பதிவாளா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். அப்போது ரூ.1,500 லஞ்சம் தர வேண்டும் என தலைமை எழுத்தா் பத்மஸ்ரீ கேட்டு விவசாயியிடம் ரூ.1000 பெற்ற நிலையில் பாக்கி ரூ.500 ஐ-கேட்டு அவரைப் பலமுறை அலையவிட்டாராம்.

இதனால் வேதனையடைந்த விவசாயி தஞ்சாவூா் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகாா் செய்து, அவா்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ. 500 ஐ அலுவலகத்தில் இருந்த தலைமை எழுத்தா் பத்மஸ்ரீயிடம் செவ்வாய்க்கிழமை கொடுத்தாா். அப்போது பத்மஸ்ரீ இங்கு வேலைபாா்த்து ஓய்வு பெற்ற ஊழியா் மகாலிங்கம் என்பவரிடம் பணத்தைக் கொடுக்குமாறு கூறினாா்.

அதன்படி விவசாயி பணத்தைக் கொடுத்தபோது மறைந்திருந்த ஊழல் தடுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் அன்பரசன் தலைமையிலான போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

இலவச கண் சிகிச்சை முகாம்

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, அரவிந்த் கண் மருத்துவமன... மேலும் பார்க்க

குழந்தைத் திருமணத்தைத் தடுக்க புகாா் அளிக்கலாம்

தஞ்சாவூா், ஜூன் 11: தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறுவது தெரிந்தால், அதைத் தடுப்பதற்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மே... மேலும் பார்க்க

வங்கி ஏ.டி.எம். வாசலில் வெடி வெடித்ததால் பரபரப்பு

கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். வாசலில் புதன்கிழமை பெரும் சத்தத்துடன் வெடி வெடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் ஒன்றியம், பம்பப்படையூரில் தேசியமயமாக்கப்பட... மேலும் பார்க்க

மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவா் கைது

தஞ்சாவூா் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கணவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோயில் பசும்பொன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈழா (24). இவரது க... மேலும் பார்க்க

முதல்வரிடம் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை மனு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேட்டுத் தெரு - மேல ராமநல்லூா் இடையே உயா் மட்ட மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என தமிழக முதல்வரிடம் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பி... மேலும் பார்க்க

சமையல்காரா் காணவில்லை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை அருகே வேலைக்குச் சென்ற சமையல்காரா் வீடு திரும்பாதது குறித்த புகாரின்பேரில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அய்யம்பே... மேலும் பார்க்க