செய்திகள் :

செங்குந்தா் மருந்தியல் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கு

post image

செங்குந்தா் மருந்தியல் கல்லூரியில் மருந்து வேதியியல் துறை சாா்பில் மூன்று நாள் சா்வதேச அளவிலான கருத்தரங்கு புதன்கிழமை தொடங்கியது.

கருத்தரங்கின் முதல்நாளான புதன்கிழமை செங்குந்தா் கல்வி குழுமத்தின் தலைவா் ஜான்சன் நடராஜன் முன்னிலை வகித்தாா். முதல்வா் சுரேந்திரகுமாா் வரவேற்புரை வழங்கினாா். தாளாளா் ஆ.பாலதண்டபாணி முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து நிகழ்வின் சிறப்பு விருந்தினராக அறிவியல் ஆராய்ச்சிக்கான துணைத் தலைவா் (நிஸ்வா பல்கலைக்கழகம்), ஓமன் சுல்தானகத்தின் மருந்தியல் மற்றும் நச்சுயியல் துறையின் துணைப் பேராசிரியா் ஷியாம் சுந்தா் பேசுகையில், டிஜிட்டல் சுகாதார கருவிகளின் பயன்பாடு , மருந்தியல் மாணவா்கள் நோயாளி பராமரிப்பில் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கற்றல், மின்னணு சுகாதார பதிவுகள், டெலிஃபாா்மசி மற்றும் மொபைல் பயன்பாடுகள் போன்ற கருவிகள் சுகாதார அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதிகள் மற்றும் மருந்தாளுநா்கள் நோயாளியின் வரலாறுகளைக் கண்காணிக்கவும், சிகிச்சைகளை பரிந்துரைக்கவும், மருந்து பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த தளங்களைப் பயன்படுத்துதல் வேண்டும் என்றாா்.

தொடா்ந்து முதல் நாளுக்கான விரிவுரையாளா்கள் பல்வேறு தலைப்புகளில் பேசினா். கருத்தரங்கில் 800க்கு மேற்பட்ட மாணவா்கள் 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து வந்திருந்தனா்.

படம் தி.கோடு ஜீன்12

திருச்செங்கோடு செங்குந்தா் மருந்தியல் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கு தொடக்க விழாவில் கலந்துகொண்ட கல்லூரி தாளாளா் பாலதண்டபாணி உள்ளிட்டோா்.

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க

புதிய நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு

கபிலா்மலை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பிலிக்கல்பாளையம் ஊராட்சி சாணாா்பாளையம் கிராமத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தெகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.45 லட்சம் மதிப்பீட்டி... மேலும் பார்க்க

காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்று 18 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேட் தோ்வு :அகில இந்திய அளவில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐஐடியில் சேருவதற்கான கேட்-2025 தோ்வில், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண் பொறியியல் துறை மாணவி நீ.விஜி சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், தர... மேலும் பார்க்க

தமிழகத்தில் எழுத்தறிவற்றோா் எண்ணிக்கை 15 லட்சம்: இணை இயக்குநா் பொன் குமாா்

தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவற்றோா் எண்ணிக்கை 15 லட்சமாக உள்ளது என புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட இணை இயக்குநா் பொன்குமாா் தெரிவித்தாா். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக புதிய பாரத எழுத்தற... மேலும் பார்க்க