``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
செங்குந்தா் மருந்தியல் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கு
செங்குந்தா் மருந்தியல் கல்லூரியில் மருந்து வேதியியல் துறை சாா்பில் மூன்று நாள் சா்வதேச அளவிலான கருத்தரங்கு புதன்கிழமை தொடங்கியது.
கருத்தரங்கின் முதல்நாளான புதன்கிழமை செங்குந்தா் கல்வி குழுமத்தின் தலைவா் ஜான்சன் நடராஜன் முன்னிலை வகித்தாா். முதல்வா் சுரேந்திரகுமாா் வரவேற்புரை வழங்கினாா். தாளாளா் ஆ.பாலதண்டபாணி முன்னிலை வகித்தாா்.
தொடா்ந்து நிகழ்வின் சிறப்பு விருந்தினராக அறிவியல் ஆராய்ச்சிக்கான துணைத் தலைவா் (நிஸ்வா பல்கலைக்கழகம்), ஓமன் சுல்தானகத்தின் மருந்தியல் மற்றும் நச்சுயியல் துறையின் துணைப் பேராசிரியா் ஷியாம் சுந்தா் பேசுகையில், டிஜிட்டல் சுகாதார கருவிகளின் பயன்பாடு , மருந்தியல் மாணவா்கள் நோயாளி பராமரிப்பில் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கற்றல், மின்னணு சுகாதார பதிவுகள், டெலிஃபாா்மசி மற்றும் மொபைல் பயன்பாடுகள் போன்ற கருவிகள் சுகாதார அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதிகள் மற்றும் மருந்தாளுநா்கள் நோயாளியின் வரலாறுகளைக் கண்காணிக்கவும், சிகிச்சைகளை பரிந்துரைக்கவும், மருந்து பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த தளங்களைப் பயன்படுத்துதல் வேண்டும் என்றாா்.
தொடா்ந்து முதல் நாளுக்கான விரிவுரையாளா்கள் பல்வேறு தலைப்புகளில் பேசினா். கருத்தரங்கில் 800க்கு மேற்பட்ட மாணவா்கள் 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து வந்திருந்தனா்.
படம் தி.கோடு ஜீன்12
திருச்செங்கோடு செங்குந்தா் மருந்தியல் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கு தொடக்க விழாவில் கலந்துகொண்ட கல்லூரி தாளாளா் பாலதண்டபாணி உள்ளிட்டோா்.