உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவா்கள் கைதுக்கு காரணம்: அமைச்சா் ஜெய்...
செங்குந்தா் மருந்தியல் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
செங்குந்தா் மருந்தியல் கல்லூரியில் சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செங்குந்தா் கல்விக் குழுமத்தின் செயலாளா் ஆ.பாலதண்டபானி தலைமை வகித்தாா். முதல்வா் சுரேந்திரகுமாா் வாழ்த்துரை வழங்கினாா். இதில், தலைமை நிா்வாக அதிகாரி ஆ.அரவிந்த் திருநாவுக்கரசு முன்னிலை வகித்து பேசியதாவது:
உலகளாவிய போதைப் பொருள் பிரச்னை பெரும் சவாலை முன்வைக்கிறது. போதைப் பொருள்களுடன் போராடும் தனிநபா்கள் முதல் போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் விளைவுகளுடன் போராடும் சமூகங்கள்வரை போதைப் பொருள்களின் தாக்கம் தொலைநோக்குடையது மற்றும் சிக்கலானது என்றாா்.
சிறப்பு விருந்தினா்களாக திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு ஆய்வாளா் எஸ்.பிரபாவதி மற்றும் துணை ஆய்வாளா் பி.சங்கீதா ஆகியோா் கலந்துகொண்டு பேசுகையில், போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் கடுமையான உடல்நல அபாயங்கள் குறித்த விழிப்புணா்வை ஊக்குவிப்பதற்கும், போதைப் பொருள் தேவை மற்றும் விநியோகத்தைக் குறைப்பதற்கும், போதைப் பொருள்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வின் முக்கியத்துவத்தையும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடா்புடைய சவால்களை எதிா்த்துப் போராடுவதற்கான விழிப்புணா்வையும் மாணவா்களுக்கு ஏற்படுத்தினா்.
இதில், போதைப் பொருள் தடுப்புக்கான உறுதிமொழியை மாணவா்களும், பேராசிரியா்களும் எடுத்துக்கொண்டனா்.