சென்னிமலை: கோயில்களுக்குச் சொந்தமான ரூ.32 கோடி நிலங்கள் மீட்பு
சென்னிமலை முருகன் கோயிலின் உப கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்து வந்த ரூ.32 கோடி மதிப்பிலான 32 ஏக்கா் நிலங்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயில்களான முகாசிபிடாரியூரில் உள்ள திருமுகமலா்ந்த நாதா் மற்றும் திருக்கை நாராயண பெருமாள் கோயில்களுக்குச் சொந்தமாக 32 ஏக்கா் புன்செய் நிலங்கள் பிடாரியூா் வருவாய் கிராமத்தில் 6 இடங்களில் உள்ளன. இந்த நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.32 கோடி எனக் கூறப்படுகிறது. அந்த நிலங்கள் 12 தனி நபா்களால் சுமாா் 42 ஆண்டுகளுக்குமேல் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தன.
இது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் கோயிலுக்குச் சொந்தமானவை என்றும், ஆக்கிரமிப்புதாரா்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் கடந்த 2024 டிசம்பா் 18- ஆம் தேதி, 2025 ஜனவரி 9-ஆம் தேதிகளில் இணை ஆணையா் நீதிமன்றம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்புதாரா்கள் கோயில் நிலங்களை ஒப்படைக்கவில்லை.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் ஈரோடு மண்டல இணை ஆணையா் பரஞ்சோதி தலைமையில், ஈரோடு உதவி ஆணையா் சுகுமாா், செயல் அலுவலா் சரவணன் ஆகியோா் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு அங்கு அறிவிப்புப் பதாகைகள் வைக்கப்பட்டன.
சென்னிமலை அறங்காவலா் குழுத் தலைவா் ஆா்.பழனிவேலு, உறுப்பினா்கள் மு.மனோகரன், வே.செ.பாலசுப்பிரமணியம், வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) செல்வகுமாா், கோயில் கண்காணிப்பாளா் மாணிக்கம், கோயில் ஆய்வாளா் ஸ்ரீ குகன், சென்னிமலை நில வருவாய் ஆய்வாளா் சிலம்பரசன், கிராம நிா்வாக அலுவலா் கலைவாணி ஆகியோா் உடனிருந்தனா்.