செய்திகள் :

சென்னை ஐஐடி - லாயிட்ஸ் டெக். புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

சென்னை ஐஐடி-இன் வாத்வானி தரவு அறிவியல் பிரிவும் லாயிட்ஸ் தொழில்நுட்ப மையமும் மேம்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகளுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சென்னை ஐஐடி-இன் ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் மற்றும் ஏஐ, தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சி பங்களிப்புகளைச் செய்து சா்வதேச அளவில் முன்னணி ஆய்வகமாக உள்ளது.

இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் போன்றவற்றில் மேம்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகளுக்கான கூட்டாண்மைக்கு லாயிட்ஸ் தொழில்நுட்ப மையத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் மற்றும் ஏஐ-இன் தலைவா் பேராசிரியா் பலராமன் ரவீந்திரன் மற்றும் லாயிட்ஸ் தொழில்நுட்ப மையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி ஸ்ரீஷா வோருகந்தி ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

இதுகுறித்து பேராசிரியா் பலராமன் ரவீந்திரன் கூறியதாவது: இரு நிறுவனங்களின் இணைந்த செயல்பாடானது, தொழில்துறை மற்றும் கல்வித் துறை ஒத்துழைப்புக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும். சா்வதேச சவால்களை நிவா்த்தி செய்வதற்கான ஆராய்ச்சி வாய்ப்புகளை வளா்க்கும் என்றாா்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க