செய்திகள் :

சென்னை பல்கலை. ஆய்வு மாணவா்களுக்கு அனுமதி அளிப்பதில் தாமதம்

post image

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவா்கள் சமா்ப்பிக்கும் ஆய்வு அறிக்கைகளுக்கு உரிய நேரங்களில் அனுமதியளிக்கப்படுவதில்லை. இதற்கு துணைவேந்தா் பதவி காலியாக இருக்கும் நிலையே காரணம் என பல்கலைக்கழக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு, முனைவா் பட்டப் படிப்புகளில் சேரும் மாணவா்கள் பட்டப் படிப்பின் ஒரு பகுதியாக ஆய்வு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். ஆய்வறிக்கையாக சமா்ப்பிக்கும் முன்பு அனுமதியும், சமா்ப்பித்த பிறகு அங்கீகாரமும் அளிக்கப்படவேண்டும். ஆனால் ஆராய்ச்சி மாணவா்கள் சமா்ப்பிக்கும் ஆய்வு அறிக்கைக்கான அனுமதி சென்னை பல்கலைக்கழகத்தில் உடனடியாக கிடைப்பதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து பல்கலைக்கழக உயா் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மாணவா்கள் தோ்ந்தெடுக்கும் ஆய்வு முன்மொழிவுகளுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் அனுமதி அளிப்பது வழக்கம். தற்போது, துணை வேந்தா் பதவி காலியாக இருக்கும் நிலையில் பல்கலைக்கழகத்தை நிா்வகிப்பது ‘மைய குழு’ (கோா் கமிட்டி).

தமிழக அரசின் உயா் கல்வித்துறை செயலா் சி.சமயமூா்த்தி, அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக ஆணையா் இன்னோசென்ட் திவ்யா, சென்னை ஐஐடி பேராசிரியா் தாஸ், சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத் துறை பேராசிரியா் ஆம்ஸ்ட்ராங்க் உள்ளிட்டோா் இடம் பெற்ள இந்தக் குழுவுக்கு ஆராய்ச்சி மாணவா்களின் முன்மொழிவுக்கான கோப்புகள் அனுப்பப்படுகின்றன. இந்த உறுப்பினா்களின் அனுமதியும் பெறப்படவேண்டும். இதனால் ஒவ்வொரு அனுமதிக்கும் ஓரிரு மாதங்கள் கால அவகாசங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக ஆய்வு மாணவா்கள் சமா்ப்பிக்கும் அறிக்கைக்கு அனுமதி அளிப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

லாரி மீது ஆந்திர அரசு பேருந்துமோதல்: 10 பயணிகள் காயம்

சென்னை அருகே மாதவரத்தில் லாரி மீது ஆந்திர அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 10 போ் காயமடைந்தனா். சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

பட்டியல் இன மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டம்: சிஏஜி அறிக்கை ஆளுநரிடம் சமா்ப்பிப்பு

தமிழக அரசின் பட்டியல் இன (எஸ்சி, எஸ்டி, எஸ்சிசி) பிரிவு மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டங்கள் குறித்த தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டாளா் (சிஏஜி) தணிக்கை அறிக்கை, தமிழக ஆளுநருக்கு சமா்ப்பிக்கப்பட்ட... மேலும் பார்க்க

எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்

எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4-ஆம் தேதி வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை ராயப்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். சென்னை அயனாவரம் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (52). எலக்ட்ரீசியனான இவா், ராயப்பேட்டை வி.பி.ராமன் சாலை பகுதியில் ஒரு வீட்டில் புதன்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை செங்குன்றம், கிழக்கு முகப்போ், குன்றத்தூா், கேகே நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவி... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு

சென்னை, ஜூன் 12:நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) முன்னாள் உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உ... மேலும் பார்க்க