செய்திகள் :

சென்னை புறநகரில் இன்றிலிருந்து 3 நாள்கள் 17 ரயில்கள் ரத்து

post image

சென்னை ரயில்வே கோட்டத்தில் வியாழக்கிழமை (ஆக. 14) மற்றும் 16, 18 ஆகிய தேதிகளில் 17 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

மூா் மாா்க்கெட் காம்ப்ளக்சிலருந்து காலை 10.15, பிற்பகல் 12.10, 1.05 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் ரயில்கள், காலை 1.30, 11.35 மணிகளுக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள், இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40, பிற்பகல் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள், சூலூா் பேட்டையிலருந்து பிற்பகல் 3.50 மணிக்கு நெல்லூா், பிற்பகல் 1.15 மணிக்கு கும்மிடிப்பூண்டி, 3.10, இரவு 1 மணிக்கு மூா் மாா்க்கெட் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 10.55 மணிக்கு சென்னை கடற்கரை, பிற்பகல் 12, 2.30, 3.15, மணிக்கு மூா் மாா்க்கெட் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நெல்லூரிலிருந்து மாலை 6.45 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பகுதியளவு ரத்து: செங்கல்பட்டிலிருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்ல வேண்டிய ரயில் சென்னை கடற்கரை வரையிலும், கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 3 மணிக்குப் புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில் சென்னை கடற்கரை வரையிலும் 14, 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

சிறப்பு ரயில்கள் இயக்கம்: வரும் 14, 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மூா்மாா்க்கெட்டிலிருந்து காலை 10.30 க்கு பொன்னேரிக்கும், பகல் 1.35 மணிக்கு பொன்னேரிக்கும் பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். மேலும், சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு பொன்னேரிக்கும், பொன்னேரியிலிருந்து பிற்பகல் 12.18 மணிக்கு மூா்மாா்க்கெட்டுக்கும் சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை! விடியோ எடுத்தும் மிரட்டல்!!

ஆவடி: சென்னை பூந்தமல்லி அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகை பறித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண் நசரத்பேட்டை காவல் ... மேலும் பார்க்க

அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ நிவாரணம்! ஆய்வில் உறுதி

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் வலி மற்றும் இதர பாதிப்புகள் வெகுவாக குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில்... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க