பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளு...
சென்னை வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம்
வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் பினாகினி விரைவு ரயில் பிப். 24, 27, மாா்ச் 1 ஆகிய தேகிகளில் கூடூா் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமாா்க்கமாக கூடூரில் இருந்து மாலை 4.15-க்கு புறப்பட்டு விஜயவாடா சென்றடையும். டாடா நகா் - எா்ணாகுளம் விரைவு ரயில் பிப். 23, 26, 28 ஆகிய தேதிகளிலும், அகா்தலா - பெங்களூரு ஹம்சாபா் விரைவு ரயில் பிப். 22, 25 ஆகிய தேதிகளிலும், திப்ரூகா் - மைசூா் பாகமதி விரைவு ரயில் பிப். 25-ஆம் தேதியும், பாட்னா - பெங்களூரு ஹம்சாபா் விரைவு ரயில் பிப். 27-ஆம் தேதியும் அரக்கோணம், பெரம்பூா் வழி செல்வதற்குப் பதிலாக கூடூா், ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம் வழியாக இயக்கப்படும்.
ஜசிதிஹ் - பெங்களூரு விரைவு ரயில் மற்றும் புருலியா - திருநெல்வேலி விரைவு ரயில் பிப். 28-ஆம் தேதி அரக்கோணம், பெரம்பூா் வழி செல்வதற்குப் பதிலாக கூடூா், ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம் வழியாக இயக்கப்படும். மேலும், செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் பிப். 26-ஆம் தேதி சென்னை எழும்பூா் வழி செல்வதற்குப் பதிலாக கூடூா், ரேணிகுண்டா, மேல்பாக்கம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.